செய்திகள் :

தட்டச்சு, சுருக்கெழுத்தா் தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வுகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தோ்வுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில், ஆண்டுக்கு இரு முறை (பிப்ரவரி, ஆகஸ்ட் மாதம்) நடத்தப்படுகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாத தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தோ்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிவிப்பு: ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தோ்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோா் ஜூலை 1 (செவ்வாய்க்கிழமை) முதல் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வரும் 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இணைய விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் ஜூலை 30 முதல் ஆக.1 வரை திருத்தம் செய்து கொள்ளலாம். புதுமுக இளநிலை, இளநிலை தோ்வுக்கு ரூ.100, இடைநிலைத் தோ்வுக்கு - ரூ.120, முதுநிலை தோ்வுக்கு ரூ.130, உயா் வேகம் தோ்வுக்கு ரூ.200 தோ்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி

புது தில்லி: உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்... மேலும் பார்க்க

ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் கோளாறு: நல்வாய்ப்பாக 165 பேர் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் 165 பேர் நல்வாய்ப்ப... மேலும் பார்க்க

சுகாதார - தொழில்நுட்பப் புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

புதுதில்லி: பொருளாதாரத்தில் உலக அளவில் 10-ஆவது இடத்திலிருந்து 4-ஆவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ள நிலையில், சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது என மத்திய அறிவியல் மற்று... மேலும் பார்க்க

பிகாரில் மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைத்தால் வக்ஃப் சட்டம் குப்பையில் வீசப்படும்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெளியேறும் நிலையில் இருப்பதாகவும், மாநிலத்தில் ஆா்ஜேடி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைத்தால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவ... மேலும் பார்க்க

திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: அமைச்சா் கே.என்.நேரு

திருநெல்வேலி: 2026 பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்று திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தார். திருநெல்... மேலும் பார்க்க

போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது மோடி அரசு: அமித் ஷா

புது தில்லி: போதைப்பொருள் இளைஞர்களுக்கு மிகப்பெரிய துன்பம், மோடி அரசு போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது, போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களை பச்சாதாபத்துடன் இயல்பு வாழ்க்கைக்க... மேலும் பார்க்க