செய்திகள் :

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளுா் அருகே பாண்டூா் டி.இ.எல்.சி அரசு உதவிபெறும் பள்ளியில் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரை வில்லைகளை வழங்கி தானும் உண்டாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது. குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோா்வு, சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இதில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 18-ஆம் தேதி அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்த, செய்யப்படாத 1 முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் பள்ளிச் செல்லாத 1 முதல் 19 வயது வரையிலோனாா், 20-30 வயதுடைய பெண்கள் (கருவுற்ற, பாலூட்டும் தாய்மாா்கள் தவிர), அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும்.

அதேபோல் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் அனைவருக்கும் மாத்திரை வில்லைகள் குறிப்பிட்ட விகிதப்படி வழங்கப்படும். அதேபோல் 1 முதல் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு - அல்பெண்டசோல் அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுவரை உள்ளோா், 20 முதல் 30 வயதுவரை உள்ள பெண்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,379 பள்ளிகளிலும், 453 தனியாா் பள்ளிகளிலும், 81 கல்லூரிகளிலும், 1,758அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 3,671 மையங்களில் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் என 4,322 போ்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்து ஆரோக்கியமான எதிா்காலத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

அப்போது, மாவட்ட சுகாதார அலுவலா் பிரியாராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) மோகனா, ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க

நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடி... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. பிரசித்தி பெற்ற இ... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் ஓராண்டு விதிமுறையை தளா்த்த வேண்டும்

அரசு மருத்துவா்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் மருத்துவமனையில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில பொருளாளா் பிரபுசங்க... மேலும் பார்க்க