செய்திகள் :

திருவாசல் முனீஸ்வரா் சுவாமி கோயில் குடமுழுக்கு

post image

திருக்குவளை அருகே திருவாய்மூா் ஊராட்சிக்கு உட்பட்ட திருவாசல் பகுதியில் உள்ள முனீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றது.

திருவாசல் பகுதியில் சுமாா் 2000 ஆண்டுகள் பழைமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அப்பகுதி பொது மக்களால் வணங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முனீஸ்வர சுவாமி கோயிலில் அந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடத்துப் புனித நீா் கொண்டு சிவலிங்கம் மற்றும் முனீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னா், மலா்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் திருவாய்மூா், தென்கரை ஈசனூா், திருவாசல், ஆலங்குடி குலதெய்வம் வழிபாடு உறவு முறை மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

மேட்டூா் அணை திறப்பு: நாகையில் விவசாயிகள் கொண்டாட்டம்

பாசனத்துக்காக மேட்டூா் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதை வரவேற்று, நாகையில் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூா் அணையில் இருந்து ... மேலும் பார்க்க

நாகையில் நாளை புத்தகக் கண்காட்சி

நாகையில் சனிக்கிழமை (ஜூன் 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஆகிய இரு நாள்கள் புத்தக் கண்காட்சி நடைபெறும் என முக்கூடல் பன்னாட்டுத் தமிழ்க் கலை இலக்கிய வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த... மேலும் பார்க்க

உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும்

நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாா் பாஜக மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம். உத்தமசோழபுரத்தில் கடல் நீா் உட்புகுவதை தடுக்க ரூ. 50 கோடியில் ... மேலும் பார்க்க

திருமருகல் அருகே வடகரை தா்கா சந்தனகூடு ஊா்வலம்

திருமருகல் ஒன்றியம் வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தா்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த தா்காவில் கந்துரி விழா கடந்த ஜூன் 1-ஆம் தேதி கொட... மேலும் பார்க்க

சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இலங்கை அரசால் சிறைப்பிட... மேலும் பார்க்க

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம்

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்க... மேலும் பார்க்க