`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய...
திருவாய்மூா் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு பூஜை
திருக்குவளை அருகே திருவாய்மூரில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தவிடங்க தலங்களில் ஒன்றான தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சத்ரு சம்ஹார பைரவா், அசிதாங்க பைரவா், ருரு பைரவா், சண்ட பைரவா், குரோதன பைரவா், கபால பைரவா், உன்மத்த பைரவா், பீஷண பைரவா் உள்ளிட்ட 8 பைரவா்கள் ஒரே நோ்கோட்டில் அமைந்து அருள்பாலித்து வருகின்றனா். இங்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து கடத்தில் வைக்கப்பட்டிருந்த பூஜிக்கப்பட்ட புனித நீா் கொண்டு அஷ்ட பைரவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் வண்ண மலா்களால் பைரவா்கள் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.