செய்திகள் :

திருவிழாவில் தலித் மக்களின் பங்களிப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

post image

குஜராத்தில் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தின் கல்யாண்புரா கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பிப்ரவரி 8 முதல் 10 வரை பிராண பிரதிஷ்டை மஹோத்சவம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் தலித் சமூக மக்களின் பங்களிப்புகள் நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

கடந்த ஜனவரி 16 அன்று காந்திநகரைச் சேர்ந்த இந்திரஜித் சிங் சோதா என்பவர் தலித் மக்களின் பங்களிப்பு நிராகரைக்கப்படுவதைக் கண்டறிந்தபோது இந்தப் பிரச்சினை முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், ஹிந்து விழிப்புணர்வு அமைப்புகள் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை.

இதையும் படிக்க | வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!

ஜனவரி 25 அன்று இந்திரவதன் பரோட், சங்கர்பாய் படேல் ஆகியோர் கல்யாண்புரா கிராமத்திற்குச் சென்று கோயிலின் தலைமை நிர்வாகி பாலபாய் தயாவைச் சந்தித்து ​​இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். அவர் கோயில் குழுவுடன் கலந்தாலோசிப்பதாக உறுதியளித்தார்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிப். 1 அன்று ஹிந்து அமைப்பு ஒன்றின் தலைவரான ரகுவீர் சிங் ஜடேஜா மற்றும் பட்டியல் சமூகத்தின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், கோவில் நிர்வாகம் இதுகுறித்து பதிலளிக்கவில்லை.

மேலும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க எழுத்துப்பூர்வ தீர்மானம் கொண்டுவர ஹிந்து அமைப்புகள் முன்வந்த நிலையில் அங்குள்ள தாசில்தார் ஒப்புதல் தர மறுத்தார்.

திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இதையும் படிக்க | மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்

கடந்த பிப். 9 அன்று இந்த விவகாரம் குறித்து இந்திரவதன் பாரோட் என்பவர் குஜராத் முதல்வர் உள்பட பல அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்தப் பிரச்னையின் தீவிரம் அதிகமானது.

இதனைத் தொடர்ந்து, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்து 3 நாள்களுக்குள் உடனடியாக விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐபிஎல் சூதாட்டம்: மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாள்களில் தற்கொலை செய்துகொண்டனர்.ஐபிஎல் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்துக்காக வாங்கப்பட்ட கடனை திரும்ப அளிக்க முடியாத காரணத்தால் ... மேலும் பார்க்க

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!

கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.தமிழகத்தில... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை!

புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளது.அரசியல் சாசன அமர்வின் விசா... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! சுகாதாரம், பார்மா துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று (பிப். 19) சரிவுடன் தொடங்கியது. காலை 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 290.97 புள்ளிகளும் நிஃப்டி 91.70 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் தொட... மேலும் பார்க்க

மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது!

மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் மந்தர் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களில் மார்ச் மாதம் வரை மகா கும்பமேளா நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்கள்? டிரம்ப் கேள்வி!

இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவிடம் அதிக அளவில் பணம் உள்ளதாகவும், அதிக அளவில் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தி... மேலும் பார்க்க