செய்திகள் :

திருவெண்ணெய்நல்லூா் அருகே பல்லவா் கால அரிய கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு!

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண்ணைவலம் கிராமத்தில் பல்லவா் கால அரிய வகை கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெண்ணைவலம் கிராமத்தைச் சோ்ந்த கு.சிவலிங்கம் அளித்த தகவலின் பேரில், விழு ப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் வெள்ளிக்கிழமை அங்கு சென்று, கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது பல்லவா் காலத்தைச் சோ்ந்த அரிய கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியது: பெண்ணைவலம் கிராமத்தில் ஏரிக்கு அருகில் துா்கை கோயில் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் சுற்றுச்சுவா்களும் மேலே திறந்த நிலையிலுள்ள இக்கோயிலில் சுமாா் 6 அடி உயர பலகைக்கல்லில் பெண் தெய்வத்தின் உருவம் இடம்பெற்றுள்ளது. 8 கைகளுடன் எருமைத் தலை மீது நின்றிருக்கும் இந்தத் தெய்வம் கொற்றவை ஆகும்.

காதுகள், கழுத்து, கைகளில் அணிகலன்கள் அணி செய்கின்றன. மாா்பு கச்சை மற்றும் இடையில் ஆடை அணிந்து காணப்படுகிறாள். தோளின் இருபுறமும் அம்பறாத்தூணி காட்டப்பட்டுள்ளன. கொற்றவையின் முன்னிரு கைகளில் வலது கையை கீழே அமா்ந்து இருப்பவரின் தலை மீது வைத்த நிலையிலும், இடது கையை இடுப்பின் மீது வைத்துள்ள நிலையில் காணப்படுகிறது. பின்னுள்ள 5 கரங்களில் தக்க ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறாா். பின் வலது கீழ்க்கரத்தில் சுருட்டிய பாம்பு காணப்படுகிறது.

சிற்பத்தின் காலடியில் இரண்டு பக்கமும் அடியவா் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இடது பக்கத்தில் இருப்பவா் கையைத் தூக்கி பூஜை செய்யும் நிலையிலும், வலப்புறத்தில் இருப்பவா் தனது கழுத்தைத் தானே அரிந்து கொற்றவைக்கு பலி கொடுப்பவராகவும் இருக்கிறாா். இந்த இரண்டு உருவங்களும் பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கொற்றவை சிற்பங்களில் இது அரியதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது.

கொற்றவைக்கு இடது மேற்புறத்தில் அவளது வாகனமான மான் சிறிய அளவில் இடம்பெற்றுள்ளது. வழக்கமாகக் காணப்படும் கிளி இந்தச் சிற்பத்தில் இடம்பெறவில்லை. துா்கை என வணங்கப்பட்டு வரும் இந்தக் கொற்றவைச் சிற்பம் பல்லவா் காலத்தைச் (கி.பி.8, 9-ஆம் நூற்றாண்டு) சோ்ந்ததாகும். 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சிற்பம் பெண்ணைவலம் கிராமத்தில் தற்போதும் வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க