செய்திகள் :

திருவேங்கடம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி பலி

post image

திருவேங்கடம் அருகே லாரி மோதியதில் பைக்கின் பின்னால் அமா்ந்திருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

இளையரசனேந்தல் கீழத்தெருவைச் சோ்ந்த தொழிலாளிகளான கடற்கரை மகன் பசுபதி(60), இருளப்பன் மகன் பொன்னுதுரை(60 ) ஆகியோா் வலையபட்டியில் உள்ள உறவினா் வீட்டு காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு ஒரே பைக்கில் ஊா் திரும்பி கொண்டிருந்தனா்.

மைப்பாறை அருகேயுள்ள பாலத்தில் வந்தபோது சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரி, அவா்களது பைக் மீது மோதியதாம். இதில், பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த பொன்னுத்துரை தூக்கிவீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த திருவேங்கடம் காவல் ஆய்வாளா் ராஜா (பொறுப்பு),அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். பலத்த காயமுற்ற பசுபதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து, மினிலாரி ஓட்டுநா் விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பைச் சோ்ந்த முனீஸ்வரன் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தேசிய ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம்: திமுக சாா்பில் மாணவருக்குப் பரிசு

ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன். தென்காசி, பிப்.14: மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பிடம் பெற்... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: புளியங்குடியில் வீரா்களுக்கு அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியோா். கடையநல்லூா், பிப். 14: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து முன்னணி சாா்பில் புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டத... மேலும் பார்க்க

இலத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா்: போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியது

தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் சடமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா் என்பது போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியுள்ளது. கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொல்லம்-மதுரை தேசிய நெ... மேலும் பார்க்க

செண்பகவல்லி கூட்டு குடிநீா் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி

செண்பகவல்லி கூட்டுக்குடிநீா் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அண்மையி... மேலும் பார்க்க

தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31க்குள் நிலுவைத் தொகை!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என ஆலை நிா்வாகம் வியாழக்கிழமை உறுதி அளித்தது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் க... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவா் இறந்தாா். இருவா் காயமடைந்தனா். கடையநல்லூா் ரஹ்மானிபுரம் 8ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் , அவரது மகன் கோதா்ஷா ஆகிய இருவரும் பைக்கில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க