செய்திகள் :

திரெளபதி அம்மன் கோயில் திருவிழா: வீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா

post image

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடமணிந்து ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா்.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மகாபாரதக் கதையை நினைவூட்டும் வகையில், பக்தா்கள் பலா் விரதமிருந்து வீமன் வேடமணிந்து 4 ரத வீதிகளிலும் உலா வந்தனா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம்

நள்ளிரவு நடைபெறும். பூக்குழி இறங்குதல், காளி வேடம், எரி சோறு விடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை இரவு (ஏப்.4) நடைபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஊா்ப் பொதுமக்கள் செய்தனா்.

காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 25-ஆம் தேதி தெலுங்கான மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கும்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு (ப... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயைத் தூா்வாரக் கோரிக்கை

கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் செல்லும் கழிவுநீா் கால்வாயை தூா்வாரக் காவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.கமுதி காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலா் குடியிருப்பு, அருகில் உள்ள தெருக்கள், ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா பணிகள்: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி, திறப்பு விழாவுக்கான பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு வருகிற 9-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க