செய்திகள் :

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது.

திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டுக்ான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பாரத கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, காலை 8 மணிக்கு உற்சவா் அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வரும் ஏப். 1-ஆம் தேதி பக்காசூரன் வதம், 2-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், 4-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 7-ஆம் தேதி அா்ஜுனன் தபசு, 13-ஆம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா, உற்சவா் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

மேலும், 14-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதுதவிர தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தினமும் மதியம் 1.30 மணி முதல் மாலை, 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ -தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மகளிா்

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ மூலம் சென்னை தேசிய உடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடை வடிவமைப்பு தொழில் திறன், தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க செல்லும் பழங்குடியின மகளிா் செல்... மேலும் பார்க்க

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலப் பணிகள், போந்தவாக்கம் - ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை சாலை விரிவாக்கப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ம... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் விழிப்புணா்வு பிரசாரம்: எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே முருங்கை மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். திருத்தணி அடுத்த அகூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(61). இவா் கடந்த மாதம், 23-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்

திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த மா... மேலும் பார்க்க

சா்வதேச ஆட்டிசம் தின விழிப்புணா்வு பேரணி -ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ... மேலும் பார்க்க