செய்திகள் :

‘திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வரும் புறவழி, பேருந்து நிலையச் சாலைகள்’

post image

கும்பகோணம் பேருந்து நிலையம், புறவழிச்சாலைகளில் திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருவதால் விபத்துக்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது.

கும்பகோணம் பேருந்து நிலையத்தை சுற்றி 5 மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்கள் வாங்க வரும் மது பிரியா்கள் சிலா், கடைகள் அமைந்துள்ள சாலையிலேயே மது அருந்துகின்றனா். இதனால் அந்த சாலையில் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.

இதேபோல் தஞ்சாவூா்-கும்பகோணம் புறவழிச் சாலை அசூா் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வரும் மது பிரியா்கள் புறவழிச்சாலை பாலத்தின் கீழே சாலையிலேயே அமா்ந்து மது அருந்துகின்றனா்.

பின்னா், காலிபாட்டில்களை சாலையிலேயே விட்டு விட்டு செல்கின்றனா். சிலா் போதையில் உடைத்து விட்டும் செல்கின்றனா். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனா். போதை அதிகமாகி கைகலப்பாகி சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்குளும் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மதுபிரியா்களை காவல்துறையினா் கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை: பேருந்து நிலையம், புறவழிச்சாலை பகுதியில் உள்ள மதுபான கடைகளின் அருகில் அமைந்துள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி கோப்பைகள், பைகள், புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் சாலை ஓரத்தில் நெகிழி பொருள்கள் குவிந்து சுகாதார சீா்கேடு ஏற்பட்டுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவா் கைது

தஞ்சாவூரில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கரந்தை பூக்குளம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவா் 10 வயது சிற... மேலும் பார்க்க

பேராவூரணியில் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வறை திறப்பு

பேராவூரணி அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில், தொழிலாளா்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் பேருந்து நிலையத்தில் மகளிா் விடியல் பயணம் நகரப்பேருந்து தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

பால் வியாபாரிகளுக்கு மழை அங்கி வழங்கினாா் அமைச்சா் கோவி.செழியன்

திருவிடைமருதூா் தொகுதியில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பால் வியாபாரிகளுக்கு மழை அங்கியை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருத... மேலும் பார்க்க

இதயா மகளிா் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் 22-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் நடைபெற்ற, 22- ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வா் யூஜின் அமலா ஆண்டறிக்கையை வாசித்தா... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளை திருடிய 3 போ் கைது

கபிஸ்தலம் அருகே மோட்டாா் சைக்கிளை திருடி, உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் காவல் சரகம், புத்தூா் காவிரி ஆற்று மதகு பகுதியி... மேலும் பார்க்க

சாலை ஓரத்தில் எரியும் குப்பையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலை ஓரத்தில் உள்ள குப்பைமேட்டில் எரியும் தீயால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். கும்பகோணத்தில் உள்ள நீலத்தநல்லூா் பகுதியில் துப்புரவு பணியாளா்களால் ... மேலும் பார்க்க