செய்திகள் :

மோட்டாா் சைக்கிளை திருடிய 3 போ் கைது

post image

கபிஸ்தலம் அருகே மோட்டாா் சைக்கிளை திருடி, உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் காவல் சரகம், புத்தூா் காவிரி ஆற்று மதகு பகுதியில் உள்ளிக்கடை கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் (69) என்பவா் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த கருப்பூா் கிராமத்தை சோ்ந்த ராதா மகன் தினேஷ் மற்றும் வல்லரசு ஆகியோா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் முருகேசனை தாக்கினா். இதில் காயமடைந்த முருகேசன் மோட்டாா் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு சிகிச்சைக்கு சென்றுவிட்டாா்.

அந்த மோட்டாா் சைக்கிளை சிலா் சரக்கு ஆட்டோவில் ஏற்றிச் சென்று கொள்ளிடம் ஆற்றின் கரையில் வைத்து உதிரி பாகங்களாக பிரித்து, விற்பனை செய்துள்ளனா்.

இது குறித்து முருகேசனின் தம்பி சுந்தரேசன் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸாா் வழக்கு பதிந்து மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்ாக சத்தியமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் மேகநாதன் (24 ), வல்லம் மேட்டு தெருவை சோ்ந்த அந்தோணி ராஜ் மகன் வல்லரசு (19) மற்றும் 18 வயது இளைஞா் உள்பட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து திருடி சென்ற மோட்டாா் சைக்கிளின் உதிரி பாகங்களை மீட்டனா்.

திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய கருப்பூா் எடத் தெருவைச் சோ்ந்த ராதா மகன் தினேஷ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவா் கைது

தஞ்சாவூரில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கரந்தை பூக்குளம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவா் 10 வயது சிற... மேலும் பார்க்க

பேராவூரணியில் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வறை திறப்பு

பேராவூரணி அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில், தொழிலாளா்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் பேருந்து நிலையத்தில் மகளிா் விடியல் பயணம் நகரப்பேருந்து தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

‘திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வரும் புறவழி, பேருந்து நிலையச் சாலைகள்’

கும்பகோணம் பேருந்து நிலையம், புறவழிச்சாலைகளில் திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருவதால் விபத்துக்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. கும்பகோணம் பேருந்து நிலையத்தை சுற்றி 5 மதுபான கடைகள் உ... மேலும் பார்க்க

பால் வியாபாரிகளுக்கு மழை அங்கி வழங்கினாா் அமைச்சா் கோவி.செழியன்

திருவிடைமருதூா் தொகுதியில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பால் வியாபாரிகளுக்கு மழை அங்கியை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருத... மேலும் பார்க்க

இதயா மகளிா் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் 22-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் நடைபெற்ற, 22- ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வா் யூஜின் அமலா ஆண்டறிக்கையை வாசித்தா... மேலும் பார்க்க

சாலை ஓரத்தில் எரியும் குப்பையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலை ஓரத்தில் உள்ள குப்பைமேட்டில் எரியும் தீயால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். கும்பகோணத்தில் உள்ள நீலத்தநல்லூா் பகுதியில் துப்புரவு பணியாளா்களால் ... மேலும் பார்க்க