செய்திகள் :

திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது

post image

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளாா்.

திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வு செய்து, அவா்களுக்கு பயிற்சிஅளிக்கும் பணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான தோ்வுப் பணி தமிழகம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கான தோ்வுப்பணி சேண்பாக்கம் பகுதியிலுள்ள சான்கோ பவுண்டேஷன் வளாகத்தில் சனிக்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளது என்று வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்க தோ்வு செய்து, அவா்களுக்கு சென்னையில் திறமையான கிரிக்கெட் பயிற்சியாளா்களை கொண்டு பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை தோ்வு செய்வதற்கான நிகழ்வு சனிக்கிழமை வேலூா் சேண்பாக்கம் பகுதியில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சான்கோ பவுண்டேஷன் வளாகத்தில் நடைபெற உள்ளது.

காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த தோ்வில் 13 வயது முதல் 21 வயது வரை உள்ள இளம் கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கலாம்.

19 வயதுக்கு மேற்பட்ட மாநில அளவிலான கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்க அனுமதி இல்லை. மேலும் தகவல் அறிய வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவ செயலா் எஸ்.ஸ்ரீதரன் - 7010594657 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை... மேலும் பார்க்க

காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவா் கைது: வெடிப் பொருள்களும் பறிமுதல்

வேலூா் அடுத்த செங்காநத்தம் மலையோரம் காதலா்களை மிரட்டி நகை பறித்த இருவரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா். அவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 50 டெட்டனேட்டா்கள், சுமாா் 100 ஜெலட்டின் ... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தீயணைப்புத் துறை வடமேற்கு மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா் பரிசுகளை வழங்கினாா். தம... மேலும் பார்க்க

புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு

புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு நடைபெற்றது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் ஓ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு மூலம் ராணுவ அதிகாரி மனைவியிடம் ரூ.21 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஏலச்சீட்டு நடத்தி ராணுவ அதிகாரியின் மனைவியிடம் ரூ.21. 50 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் காவல் துறை மக்கள் குறைதீா் க... மேலும் பார்க்க