செய்திகள் :

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! விஜய் குட்டிக் கதை!

post image

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம் என்று தவெக மாநாட்டில் விஜய் குட்டிக் கதையொன்று தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று(ஆக. 21) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி 5.30 வரை நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் சுமார் 35 நிமிடங்கள் பேசினார்.

அப்போது, அவர் தொண்டர்களுக்கு குட்டிக் கதையொன்று கூறினார். விஜய் பேசும்போது, ”ஒரு நாட்டில் ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக, துணையாக இருப்பதற்காக தளபதியைத் தேடுகிறார். சரியான தகுதிகளோடு 10 பேர் தேர்வாகிறார்கள்.

ஆனால், ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், அதனால் ராஜா என்ன செய்கிறார் என்றால், 10 பேருக்கும் ஒரு போட்டி வைக்கிறார்.

அந்த 10 பேர் கைகளிலும் விதை நெல்லைக் கொடுத்து, மூன்று மாதம் கழித்து வளர்த்துக் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார். 3 மாதம் கழித்து ஒருவர் ஆள் உயரத்துக்கும், ஒருவர் தோள் உயரத்துக்கும், ஆக 9 பேரும் விதையைச் செடியாக வளர்த்துக் கொண்டு வந்தனர்.

ஒருவர் மட்டும் வெறும் தொட்டியை மட்டும் எடுத்து வந்தார். அவர் ராஜாவிடம் தண்ணீர் ஊற்றியும் பார்க்கிறேன், உரமிட்டும் பார்க்கிறேன், ஆனால் விதை வளரவில்லை என்று கூறினார்.

அதற்கு ராஜா, அவரைக் கட்டிணைத்து நீதான் என் தளபதி, அனைத்து அதிகாரமும் உனக்குதான் என்று கூறினார். அந்த 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல், முளைக்காவே முளைக்காது.

அந்த 9 திருட்டுப்பயலுகளும் என்ன செய்து இருக்கிறார்கள் என்றால், வேற விதை நெல்லை வாங்கி, அதை வளர்த்து ராஜாவையும் மக்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். இவர் மட்டும் உண்மைப்போட்டு உடைத்துள்ளார்.

அதுபோல, ஒரு நாட்டுக்கு திறமை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நேர்மையும் உண்மையும் முக்கியம். நீங்கள் அனைவரும் ராஜா, நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அந்தத் தளபதி....” என்றார்

இதையும் படிக்க: அண்ணா, எம்ஜிஆர், கேப்டன்.. தவெக மாநாட்டில் குறிப்பிடப்பட்ட திராவிடத் தலைவர்கள்!

Vijay told a short story at the Thaweka conference that truth and honesty are as important as talent.

தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்: என்னென்ன?

தவெகவின் மதுரை மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அதில், • பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் ... மேலும் பார்க்க

இது கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

மதுரை மாநாட்டில் அதிமுக குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். மதுரை மாவட்டம் பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வியாழக்கி... மேலும் பார்க்க

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் இன்று தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், மாநாட்டுக்கு வந்தவர்களின் வாகனங்களால் பாரபத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் திணறி வருகிறது.தம... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-... மேலும் பார்க்க

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

தமிழக குழந்தைகளுக்கு நான்தான் தாய்மாமன் என்று தவெக மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ... மேலும் பார்க்க

பாஜகவுடன் நேரடிக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும்... யாரைச் சொல்கிறார் விஜய்?

பாஜகவுடன் ஒரு கட்சி நேரடியாகக் கூட்டணி வைத்திருக்கிறது, மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணியில் உள்ளது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.மதுரை மாவட்டம் ... மேலும் பார்க்க