செய்திகள் :

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

post image

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆக.19 ஆம் தேதி முதலான அவரது இந்த 3 நாள் பயணத்தில், இந்தியா-ரஷியா அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் (ஐஆா்ஐஜிசி-டிஇசி) 26-வது அமா்வு நேற்று (ஆக.20) நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அந்த அமர்வுக்கு ரஷியாவின் துணைப் பிரதமா் டெனிஸ் மாண்டுரோவுடன் இணைந்து, ஜெய்சங்கா் தலைமைத் தாங்கினார்.

பின்னர், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் சொ்ஜெய் லாவ்ரோவை இன்று (ஆக.21) நேரில் சந்தித்து அவர் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், வர்த்தகம், முதலீடு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து உரையாடியாதாகக் கூறியுள்ளார்.

மேலும், உக்ரைன், ஐரோப்பியா, ஈரான், மேற்கு ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைக் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் 3 நாள் அரசு முறைப் பயணம் இன்றுடன் முடிவடையும் நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக, ரஷியாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்திருந்தது. இத்தகையச் சூழலில், அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷிய பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

Union External Affairs Minister S Jaishankar has met and held talks with Russian President Vladimir Putin.

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

உத்தரகண்டில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவனால் பரபரப்பு நிலவியது. உத்தரகண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கங்கன்தீப் சிங் கோலி இயற்பியல் ஆசிரியரா... மேலும் பார்க்க

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

தெலங்கானாவில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 மூத்த தலைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தெலங்கானாவில், இயங்கி வந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் தண்... மேலும் பார்க்க

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வ... மேலும் பார்க்க

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு வி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மன... மேலும் பார்க்க

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான பாலியல் வழக்குகளை பதிவு செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லக்னெள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ... மேலும் பார்க்க