செய்திகள் :

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

post image

உத்தரகண்டில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவனால் பரபரப்பு நிலவியது.

உத்தரகண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கங்கன்தீப் சிங் கோலி இயற்பியல் ஆசிரியராக உள்ளார். இந்த வார தொடக்கத்தில், அவர் தனது மாணவர்களில் ஒருவரை அறைந்தார். புதன்கிழமை, அதே மாணவர் தனது டிபன் பாக்ஸில் துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்து வகுப்பறையில் கங்கன்தீப்பின் முதுகில் சுட்டுள்ளார்.

படுகாயமடைந்த ஆசிரியர் உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் தோட்டா வெற்றிகரமாக அகற்றப்பட்டதை மருத்துவர் மயங்க் அகர்வால் உறுதிப்படுத்தினார். கங்கன்தீப்பின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இருப்பினும் கண்காணிப்புக்காக அவர் ஐசியுவுக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சமரத் பஜ்வா என அடையாளம் காணப்பட்ட மாணவர், தனது டிபன் பாக்ஸில் துப்பாக்கியை மறைத்து வைத்து வகுப்பறைக்குள் கொண்டு வந்தார். இந்த சம்பவம் காலை இடைவேளை முடிந்து வகுப்பறையை விட்டு கங்கன்தீப் வெளியேறும்போது நடந்தது. மாணவன் மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை நோக்கி சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் தப்பிஓட முயன்றா மாணவனை மற்ற ஆசிரியர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109 இன் கீழ், மைனர் மாணவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The incident took place at the Guru Nanak school where the teacher sustained a gunshot wound that entered from his back and lodged in his neck.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

ஜம்மு ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதத்துடன் வந்த புறாவை பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர்.ஜம்மு-காமீரின் சர்வதேச எல்லையில் உள்ள காட்மரியா பகுதியில் ஆகஸ்ட் 18 அன்று... மேலும் பார்க்க

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.... மேலும் பார்க்க

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

தெலங்கானாவில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 மூத்த தலைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தெலங்கானாவில், இயங்கி வந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் தண்... மேலும் பார்க்க

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வ... மேலும் பார்க்க

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு வி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மன... மேலும் பார்க்க