செய்திகள் :

தில்லிக்கு கேஜரிவால் எதுவும் செய்யவில்லை: ஹரியாணா முதல்வர்

post image

தில்லியின் வளர்ச்சிக்கு கேஜரிவால் எதுவும் செய்யவில்லை என்று ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகரில் பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கட்சித் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற சைனி ஜிலேபியைத் தயாரித்து பகிர்ந்தும் கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லி மக்கள் பிரதமர் மோடியின் தலைமையில் எங்களுக்கு வரலாற்று வெற்றியைக் கொடுத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக, எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசு ஆட்சியில் இருந்தது. பிரதமர் மோடியின் திட்டங்களைப் பயன்படுத்தி மக்களைப் பயன்படுத்த அவர்கள்(ஆம் ஆத்மி) ஒருபோதும் அனுமதிக்கவில்லை. எப்போதும் அவர்கள் பொய் சொன்னார்கள்.

நமீபியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் சாம் நியோமா காலமானார்!

அவர் (அரவிந்த் கேஜரிவால்) சுத்தமான தண்ணீரை வழங்குவதாகவும், யமுனையை சுத்தம் செய்வதாகவும் கூறினார்.

ஆனால் அவர் எதையும் செய்யவில்லை, அதற்குப் பதிலாக மற்றவர்களைக் குற்றம் சாட்டினார். கடந்த முறை 2025-க்குள் யமுனை நதியை சுத்தம் செய்யாவிட்டால் ஓட்டு கேட்க மாட்டேன் என்று கூறினார்.

அது முடியாதபோது ஹரியாணா யமுனையில் விஷம் கலந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இதை மக்கள் புரிந்துகொண்டு ஆட்சி அமைத்ததற்காக தில்லி மக்களுக்கு நன்றி கூறுகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட்: ப. சிதம்பரம்

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார். பட்ஜெட் தயாரிப்பின்போது ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை மத்... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள... மேலும் பார்க்க

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும்!

மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார். மகா கும்பமேளாவுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டும் பிரயாக்ராஜ் மக்களும், பக்தர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் பக... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோர் பத்திரம்.. கடனுக்கு மட்டுமல்ல.. கல்யாணத்துக்கும்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்று வேறு அர்த்தம் கொண்ட பழமொழி ஒன்று மருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்லி திருமணம் செய்பவர்களுக்கு பயன்பட்டு வந்துள்ளது.ஆனால், தற்போது, மகாராஷ... மேலும் பார்க்க