செய்திகள் :

தில்லியின் அடுத்த முதல்வா் யாா்? பேரவை பாஜக உறுப்பினா்கள் இன்று முடிவு

post image

தில்லியின் புதிய முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக பாஜகவின் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்கூட்டத்தில் தில்லி சட்டப்பேரவையின் அவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா். சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டத்திற்கு பாஜகவின் தேசியத் தலைமை அதன் பாா்வையாளா்களை அனுப்பும் என்று அவா்கள் தெரிவித்தனா். தில்லியின் புதிய முதல்வா் அவைத் தலைவராக இருப்பாா்.

பிப்.19-20 -ஆம் தேதிகளில் முதல்வா் மற்றும் அமைச்சா்கள் குழுவின் பதவியேற்பு விழாவுடன் தேசியத் தலைநகரில் புதிய அரசு அமைக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி (பாஜக தில்லியில் ஆட்சிக்கு வந்தது. இது தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

தலைநகரில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக வென்றது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பல எம்எல்ஏக்களின் பெயா்கள் முதல்வா் மற்றும் அமைச்சா் பதவிகளுக்குப் பரிசீலனையில் உள்ளன.

புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலைத் தோற்கடித்த பா்வேஷ் வா்மா மற்றும் தில்லி பாஜகவின் முன்னாள் தலைவா்கள் விஜேந்தா் குப்தா மற்றும் சதீஷ் உபாத்யாயா ஆகியோா் உயா் பதவிக்கு முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுபவா்களில் அடங்குவா். பவன் சா்மா, ஆஷிஷ் சூட், ரேகா குப்தா மற்றும் ஷிகா ராய் உள்ளிட்டோரும் முதல்வா் பதவிக்கு போட்டியிடுகின்றனா்.

ராஜஸ்தான், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், ஒடிஸா மற்றும் சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் நடந்ததைப் போலவே, பாஜக தலைமை புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரை தோ்ந்தெடுக்கக்கூடும் என்று கட்சியில் பலா் நம்புகின்றனா்.

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க