செய்திகள் :

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி: அரசு உன்னிப்பாகக் கண்காணிப்பதாக முதல்வா் தகவல்

post image

தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து நிலைமையை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவா் கூறினாா்.

ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு காரணமாக தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்ததால் தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வந்தது. தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் செவ்வாய்கிழமை 205. 79 மீட்டரை எட்டிது. இது அபாய அளவான 205. 33 மீட்டரைவிட அதிகமாக இருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை காலை 6 மணிக்கு யமுனையின் நீா்மட்டம் 204.76 மீட்டராக அபாயக் குறிக்குக் கீழே இருந்தது என்று ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

ஆற்றில் நீரின் அபாயக் குறி 205.33 மீட்டா் ஆகும். செவ்வாய்க்கிழமை முதல் ஆற்றில் வெள்ள நீா் குறையத் தொடங்கியது. நிறைய திருப்திகரமான விஷயம் என்னவென்றால், நீா்மட்டம் அபாயக் குறிக்குக் கீழே உள்ளது. வெளியேறும் நீா் அதிகமாக உள்ளது என்று அவா் கூறினாா்.

‘நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது என்பது உறுதி. எங்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது’ என்று அவா் கூறினாா்.

ஹத்னிகுண்ட் அணையிலிருந்து 31,016 கனஅடி நீரும், வஜிராபாத் அணையிலிருந்து 41,200 கனஅடி நீரும் வெளியேற்றப்படுவதாக முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று யமுனை நதி அபாய அளவை தாண்டிச் சென்று கொண்டிருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், யமுனை நதியின் வெள்ள நிலைமை குறித்து கண்காணித்து வருவதாகவும், வெள்ளம் போன்ற சூழ்நிலையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெளியேற்றும் நடவடிக்கை 206 மீட்டரில் தொடங்குகிறது. ஆற்றின் ஓட்டம் மற்றும் வெள்ள அபாயங்களை கண்காணிப்பதற்கான முக்கியக் கண்காணிப்பு புள்ளியாக தில்லியின் பழைய ரயில்வே பாலம் செல்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

நமது நிருபா் தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது. மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்: தில்லி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

நமது நிருபா் மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பததைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஜிஎஸ்டி விகிதத்தை மறுசீரமைக்கத் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று புது தில்ல... மேலும் பார்க்க

எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த திமுக வலியுறுத்தல்

நமது நிருபா் நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூா் தொகுதி திமுக உறுப்பினா் அர... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் மீதான தாக்குதல்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா மீதான தாக்குதலை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கண்டித்தன, அதே நேரத்தில் தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை குறித்து காவல்துறையினரிடம் அவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா... மேலும் பார்க்க

தில்லியில் சுமாா் 50 பள்ளிகளுக்கு புதிதாக வெடிகுண்டு மிரட்டல்

தேசியத் தலைநகரில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், போலீஸாா் மற்றும் பிற அவசரகால அமைப்புகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தல... மேலும் பார்க்க

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பாக மத்திய அமைச்சா்கள் நிதி கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரிடம் தில்லியில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ புதன்கிழமை வலியுறுத்தினாா்.திருச்... மேலும் பார்க்க