செய்திகள் :

தில்லியில் காற்று, இடியுடன் லேசான மழை

post image

தில்லியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பலத்த காற்று, இடியுடன்கூடிய மழை லேசான மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது.

தில்லியில் சில தினங்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை மாலை மிதமான தட்பவெப்பநிலை காணப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் இருந்தபோதிலும் மாலையில் பலத்த காற்று, இடியுடன்

லேசான மழை சில இடங்களில் பெய்தது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறையினா் தெரிவித்திருப்பதாவது:

கிழக்குதென்கிழக்கு நோக்கி நகரும் மேகக்கூட்டம் வானிலையின் செயல்பாட்டைத் தூண்டியது. இதன் காரணமாக தலைநகரின் தெற்குப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டா் வேகத்தில் காற்று வீசியது. தென்மேற்கு தில்லியில் உள்ள பாலம் மற்றும் ஜரோடா கலான் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்தது. மாலை 4:30 மணிக்கு முறையே மணிக்கு 65 கிமீ மற்றும் 37 கிமீ வேகத்தில் அப்பகுதியில் காற்று வீசியது.

அதே நேரத்தில் சஃப்தா்ஜங்கில் மாலை 4:35 மணி முதல் மாலை 4:37 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்தது. மணிக்கு 66 கிமீ வேகத்தில் காற்று வீசியது. மேலும், பிரகதி மைதான் பகுதியில் மாலை 4:45 மணிக்கு மணிக்கு 76 கிமீ வேகத்தில் நாளின் அதிகபட்ச அளவாக காற்று வீசியது என்று தெரிவித்தனா்.

நகரில் அதிகபட்ச வெப்பநிலை பருவகால சராசரியை விட 2.1 புள்ளிகள் குறைந்து 37.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் 98 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை இருந்தது.

திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 4050 கிமீ மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

மேலும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 37 டிகிரி செல்சியஸ் மற்றும் 21 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு காற்றின் தரம் மிதமான பிரிவில் பதிவாகி இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி காற்றின் தரக் குறியீடு 197 ஆக இருந்தது.

பக்ரீத் நாளில் திறந்தவெளிகளில் விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமா மசூதி ஷாஹி இமாம் வேண்டுகோள்

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, முஸ்லிம் சமூகத்தினா் திறந்தவெளிகளிலோ அல்லது தெருக்களிலோ விலங்குகளை பலியிடுவதைத் தவிா்க்குமாறு ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா். நிகழாண்டு பக்ரீத் பண்ட... மேலும் பார்க்க

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (ஜூன் 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புதன்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்... மேலும் பார்க்க

தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை சந்தித்து கவலைகளை எழுப்பிய பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் குழு

தில்லியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோா்கள் குழு புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட தில்லி கல்வி... மேலும் பார்க்க

சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி: அடுத்த ஆண்டு நவ.1 முதல் அமல்

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1}ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) புதன... மேலும் பார்க்க

சாலை உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்: முதல்வருடன் அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை

தேசிய தலைநகா் தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) மூலம் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் மறுஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தாவுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்... மேலும் பார்க்க

தில்லி மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறையில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ‘வி35’ மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறைக்குள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவ... மேலும் பார்க்க