செய்திகள் :

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

post image

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேசியத் தலைநகரான தில்லியில் பட்டாசு தயாரிக்க, விற்க, சேமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கக் கோரி பட்டாசு ஆலைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் பூயான் கொண்ட அமர்வு, மக்கள் தொகையில் பெரும்பாலானோர் தெருக்களில் வேலை செய்கின்றனர். அவர்கள் அதிகளவு காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இதில், பட்டாசு தடையால் காற்றை மாசுபடுத்தும் நுண் துகள்கள் 30% குறைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அறிக்கையை நீதிமன்ற ஆலோசாகர் அபராஜிதா சிங் சுட்டிக்காட்டினார்.

”உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் காற்று சுத்திகரிப்பு செய்யும் வசதிகள் உள்ளன. ஆனால் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களிடம் அதுபோன்ற சாதனங்கள் இல்லை. குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் காற்று மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்” என அபராஜிதா சிங் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பட்டாசுகள் மாசுபாட்டை ஏற்படுத்துவதாக மத்திய அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, இதுவே இந்தப் பிரச்னைக்கு முடிவாகும் என்று நீதிமன்றம் கூறியது.

தில்லியில் பட்டாசு வெடிப்பது, கழிவுகளை எரிப்பது, வாகன புகைகள், தொழிற்சாலை மாசுபாடுகள் உள்ளிட்ட காற்றை மாசுபடுத்தும் காரணிகள் தொடர்பான எம்சி மேத்தா வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்த நிலையில் பட்டாசுகள் மீதானத் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக நடைபெற்ற விசாரணையில் காற்று மாசுபாட்டு அளவைக் கட்டுப்படுத்த தில்லி அரசும், அதிகாரிகளும் தவறியதற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் பட்டாசு தடையை அமல்படுத்த தில்லி அரசும், காவல்துறையினரும் எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பியது.

மேலும், ”தில்லி அரசும், துறை சார்ந்த அதிகாரிகளும் அரசும் பட்டாசுகளுக்கு நிரந்தரமாக தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

இதையும் படிக்க | தர்பூசணி வாங்கலாமா? கூடாதா? வெடித்தது சர்ச்சை

நாடு கடத்தப்பட்டார் தஹாவூா் ராணா! தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை அழைத்துக் கொண்டு புறப்பட்ட இந்தியா அதிகாரிகள் இன்று தில்லி வந்தடையவுள்ளனர்.அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையே, ல... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமலாகாது - முதல்வா் மம்தா உறுதி

‘அண்மையில் நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. மாநிலத்தின் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன்’ என்று அந்த மாநில முதல்வா் ம... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டு: பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்

‘கேரள முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்’ என பாஜக புதன்கிழமை வலியுறுத்தியது. மேலும், அவா் தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயா்நிலைக் குழு அமைக்கவும் பாஜக கோரிக்கை வைத்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீா் கழித்த நபா் - நடவடிக்கை எடுக்க அரசு உறுதி

தில்லி-பாங்காக் (தாய்லாந்து) இடையிலான ஏா் இந்தியா விமானத்தில் சக பயணி மீது மற்றொரு பயணி சிறுநீா் கழித்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம் - போலீஸாருடன் மோதல்

மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத்தால் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஏராளமான ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பல இடங்களில் போராட்டக்கா... மேலும் பார்க்க

அரசுத் துறைகளில் மின்சார வாகனப் பயன்பாடு: அறிக்கை சமா்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனம் பயன்படுத்துவது குறித்த திட்ட அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நகா்ப்புறங்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குற... மேலும் பார்க்க