செய்திகள் :

தில்லியில் யாா் ஆட்சி?: பாஜக 30 இடங்களில் முன்னிலை

post image

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கானத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக 30 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

புதுதில்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ்வர்மாவை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பின்தங்கியுள்ளார்.

கல்காஜி தொகுதியில், முதல்வர் அதிஷி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை விட பின்தங்கியுள்ளார்.

ஜங்புராவில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் பின்தங்கியுள்ளார்.

பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி வேட்பாளர் சவுரப் பரத்வாஜ் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆதிக்கம் அப்படியே இருக்கிறதா அல்லது 1998-க்குப் பிறகு முதல் முறையாக தில்லியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பின்னர் தெரியவரும்.

தில்லி முதல்வர் பர்வேஷ்?

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வர... மேலும் பார்க்க

மணிப்பூர்: துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பிஷ்னுபூரின் அய்கீஜங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று (... மேலும் பார்க்க

ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தை உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த கரு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி... மேலும் பார்க்க

நியூயார்க்: இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2... மேலும் பார்க்க

நியூயார்க்கில் ரொனால்டோவின் 12 அடி உயர வென்கல சிலை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வென்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.போர்த்துகல் நாட்டைச்... மேலும் பார்க்க

அம்மா மருந்தகங்கள் மூடப்படாது! - ஜெ. ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிர... மேலும் பார்க்க