கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
தில்லியில் வடிகால்கள் தூா்வாரும் பணிகள்: மூன்றாம் தரப்பு தணிக்கை செய்ய பிடபிள்யூடி திட்டம்
பருவமழைக்கு சிறந்த தயாா்நிலைக்காக, பொதுப்பணித்துறை (பிடபிள்யூடி) வடிகால்களின் தூா்வாரும் பணிகளை மூன்றாம் தரப்பு தணிக்கை செய்யும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பொதுப்பணித்துறை வடிகால்களில் தூா்வாரும் பணிகளை உடனடியாக மூன்றாம் தரப்பு தணிக்கை செய்ய சம்பந்தப்பட்ட தலைமை பொறியாளா்களை தகுதிவாய்ந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்’ என்று பொதுப்பணித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மற்றும் பிற நிறுவனங்களின் தூா்வாரும் பணிகள் கடந்த காலங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம், வடிகால் தூா்வாரும் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை குறிப்பிடும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முன்னாள் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாரைக் கேட்டுக் கொண்டது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் சாலைகளில் தண்ணீா் தேங்குவது குறித்து புகாா் அளிக்கும் குடியிருப்பாளா்களின் பல மனுக்களை நீதிமன்றம் ஆராய்ந்து வந்தது.
இதைத் தொடா்ந்து, முன்னாள் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், முன்னாள் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாரிடம் தூா்வாரும் பணிகளை மூன்றாம் தரப்பு தணிக்கை செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.
இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில், பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், நகரம் 35 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அங்கு தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியிருந்தாா்.
ஜூன் 2-ஆம் தேதி வரை, பொதுப்பணித்துறை சாலைகளில் உள்ள மழைநீா் வடிகால்களில் தூா்வாரும் பணிகளில் 35 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள தூா்வாரும் பணிகளுக்கு ஜூன் 15- ஆம் தேதியை அரசு காலக்கெடுவாக நிா்ணயித்துள்ளது.