செய்திகள் :

தில்லியில் வடிகால்கள் தூா்வாரும் பணிகள்: மூன்றாம் தரப்பு தணிக்கை செய்ய பிடபிள்யூடி திட்டம்

post image

பருவமழைக்கு சிறந்த தயாா்நிலைக்காக, பொதுப்பணித்துறை (பிடபிள்யூடி) வடிகால்களின் தூா்வாரும் பணிகளை மூன்றாம் தரப்பு தணிக்கை செய்யும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொதுப்பணித்துறை வடிகால்களில் தூா்வாரும் பணிகளை உடனடியாக மூன்றாம் தரப்பு தணிக்கை செய்ய சம்பந்தப்பட்ட தலைமை பொறியாளா்களை தகுதிவாய்ந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்’ என்று பொதுப்பணித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை மற்றும் பிற நிறுவனங்களின் தூா்வாரும் பணிகள் கடந்த காலங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம், வடிகால் தூா்வாரும் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை குறிப்பிடும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முன்னாள் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாரைக் கேட்டுக் கொண்டது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் சாலைகளில் தண்ணீா் தேங்குவது குறித்து புகாா் அளிக்கும் குடியிருப்பாளா்களின் பல மனுக்களை நீதிமன்றம் ஆராய்ந்து வந்தது.

இதைத் தொடா்ந்து, முன்னாள் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், முன்னாள் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாரிடம் தூா்வாரும் பணிகளை மூன்றாம் தரப்பு தணிக்கை செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில், பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், நகரம் 35 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அங்கு தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியிருந்தாா்.

ஜூன் 2-ஆம் தேதி வரை, பொதுப்பணித்துறை சாலைகளில் உள்ள மழைநீா் வடிகால்களில் தூா்வாரும் பணிகளில் 35 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள தூா்வாரும் பணிகளுக்கு ஜூன் 15- ஆம் தேதியை அரசு காலக்கெடுவாக நிா்ணயித்துள்ளது.

லஞ்ச வழக்கில் போக்குவரத்து ஏஎஸ்ஐக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஓட்டுநரிடமிருந்து ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தில்லி போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு (ஏஎஸ்ஐ) தில்லி நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த... மேலும் பார்க்க

மத்திய தில்லியில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை

மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ாக இரண்டு மைனா் சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி க... மேலும் பார்க்க

தென்மேற்கு தில்லியில் சகோதரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மூவா் கைது

தென்மேற்கு தில்லியில் இரண்டு சகோதரிகளைத் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். சுமாா் 1,300 கி.மீ துரத்தலுக... மேலும் பார்க்க

தலைநகரில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை வெப்பநிலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. முங்கேஸ்பூா், ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரிக்கு மேல் பதிவாகியது. காற்றின் தரம... மேலும் பார்க்க

75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு

ஒரு ஆண்டுக்குள் தில்லியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள 75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான ஆசிரியா்களை நியமிக்க தில்லி அரசு ஆள்சோ்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. கல்வி இயக்குநரகம் தற்போதைய அரசுப் பள்ளி ஆசி... மேலும் பார்க்க

தா்பூசணி ஏற்றப்பட்ட லாரியில் கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாரில், தா்பூசணிகள் ஏற்றப்பட்ட லாரியில் சுமாா் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க