செய்திகள் :

தில்லியை வந்தடைந்தது பருவமழை!

post image

தென்மேற்குப் பருவமழை தில்லியை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

வழக்கமான ஜூன் 27-ஆம் தேதி பதிலாக இரு நாள்களுக்குப் பிறகு பருவமழை தில்லியை வந்துடைந்துள்ளது.

மேலும், வழக்கமான ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒன்பது நாள்கள் முன்னதாக நாட்டின் எஞ்சிய பகுதிகளை பருவமழை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎம்டி தரவுகளின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் 26-ஆம் தேதிக்குள் நாட்டின் முழு பகுதியையும் பருவமழை உள்ளடக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கி ஜூலை 8-ஆம் தேதிக்குள் முழு நாட்டையும் அடையும். செப்டம்பா் 17-ஆம் தேதியையொட்டி வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் முழுமையாக விலகும்.

நிகழாண்டில், பருவமழை மே 24-ஆம் தேதி கேரளத்தை அடைந்தது. பருவமழை கடந்த 2009-ஆம் ஆண்டில் மே 23-ஆம் தேதி தொடங்கியது. அதன் பிறகு முதலாவதாக நிகழாண்டில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! இருவா் கைது

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் உள்... மேலும் பார்க்க

மைனா் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மைனா் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன... மேலும் பார்க்க

யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா

யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநி... மேலும் பார்க்க