செய்திகள் :

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட்: ப. சிதம்பரம்

post image

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

பட்ஜெட் தயாரிப்பின்போது ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை மத்திய அரசு மறந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

2025-26 மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தை மாநிலங்களவையில் தொடங்கி வைத்து ப. சிதம்பரம் பேசியதாவது,

''நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் மூலதனச் செலவினங்களையும் மாநிலங்களுக்கான மானிய உதவிகளையும் குறைப்பதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை மேம்படுத்துவதாகக் கூறி, அதை மோசமான நிலைக்கு மாற்றியுள்ளார்.

பட்ஜெட்டுக்கு பின்னால் ஒரு தத்துவம் இருக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் அப்படி எதுவும் இல்லை. இது அரசியலை மையப்படுத்தி முன்மொழியப்பட்ட பட்ஜெட் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இது குறித்து மேலும் விரிவாகப் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்துக்காக நிர்மலா சீதாராமனை நான் பாராட்டுகிறேன். அவரின் பட்ஜெட் நோக்கங்களில் ஒன்று இரு நாள்களுக்கு முன்பு நடந்தேறியது (தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி).

அவர் (நிதியமைச்சர்) எதையும் செய்யவில்லை. வருமான வரியின் மீதும் தில்லி தேர்தலின் மீதும் மட்டுமே கவனமாக இருந்தார். இது இந்தியக் குடும்பங்களை முடக்கிவிடும். இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு 25.2 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாகச் சரிந்துள்ளது.

2023 தரவுகளின்படி, ஒரு கிராமப்புற குடும்பத்தின் சராசரி மாதாந்திர செலவு ரூ. 4,226 ஆக இருந்தது. நகர்ப்புறங்களில் ரூ. 6,996 ஆக இருந்தது.

சமூகத்தில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத சராசரி குடும்பங்களுக்கு மத்திய பட்ஜெட் என்ன அறிவித்துள்ளது. ஏழ்மையிலுள்ள 25 சதவீத குடும்பங்களுக்கு இந்த அறிவிப்பில் என்ன கிடைக்கும்.

கடந்த 7 ஆண்டுகளில் தனிநபரின் (ஆண்) மாத வருவாய் ரூ. 12,665-லிருந்து ரூ. 11,858 ஆக குறைந்துள்ளது. சுயதொழில் செய்யும் நபரின் (ஆண்) மாத வருவாய் ரூ. 9,454-லிருந்து ரூ. 8,591 ஆக குறைந்துள்ளது.

மூலதன செலவைக் குறைப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். அவர் கூறிய 4.8 சதவீத இலக்கை அவர் எவ்வாறு எட்டுவார்?

மத்திய அரசின் மூலதன செலவினத்தை ரூ. 92,682 கோடி குறைத்தார். வருவாய் செலவை குறைக்கவில்லை. மூலதன செலவுக்காக மாநிலங்களுக்கு வழங்கும் மானியத்தை அவர் குறைத்துள்ளார். இது ஒரு சிறந்த பொருளாதாரம் எனக் கூற முடியாது'' என சிதம்பரம் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?

கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலளர் ஜெய்ராம் ர... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!

பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.2025-ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயண... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்! - கபில் சிபல்

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட... மேலும் பார்க்க

கும்பமேளாவில் இருந்து திரும்பிய 9 பேர் விபத்தில் பலி!

மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய 9 பேர் இருவேறு விபத்துகளில் செவ்வாய்க்கிழமை காலை பலியாகினர்.உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் மருத்துவ மாணவர் தற்கொலை!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரங்கராய மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இறந்த மாணவர் ஆர். சாய் ராம்(23) என அடையாளம் காணப்பட்டது. அவர... மேலும் பார்க்க

லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்

லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் ச... மேலும் பார்க்க