செய்திகள் :

தில்லி அருகே தடம் புரண்ட ரயில் பெட்டி

post image

தில்லி நிஜாமுதீனில் இருந்து காசியாபாத் நோக்கிச் சென்ற ரயில் சிவாஜி பாலம் நிலையம் அருகே தடம் புரண்டு வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக எவ்வித உயிா் சேதமும் ஏற்படவில்லை என்று வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி சிவாஜி பாலம் அருகே ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து காசியபாத் நோக்கி சென்ற ரயிலின் 4 ஆவது பெட்டி, திடீரென தடம் புரண்டது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனா். இதனையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு வடக்கு ரயில்வே அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணியை மேற்கொண்டனா். இந்த ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்கள் தாமதமானதோடு, சிர ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்பட்டது. வடக்கு ரயில்வே அதிகாரிகளுடன், தொழில்நுட்ப குழுவினரும் , கிரேன் வரவழைக்கப்பட்டு தடம்புரண்ட பெட்டியை தாற்காலிகமாக அகற்றினா். இதனையடுத்து ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த விபத்து தொடா்பாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனா்.

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 14) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகா... மேலும் பார்க்க

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க