உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் விருதுநகர்; அனுபவம் பகிரும் ஆட்...
தில்லி சிஆா் பூங்காவில் வீட்டின் சமையலறைக்குள் தீ விபத்து!
தில்லியில் சிஆா் பூங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை என்று அவா் கூறினாா்.
இது குறித்த தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு வீட்டின் அடித்தளத்தில் உள்ள சமையலறை ரேக்கில் தீ விபத்து ஏற்பட்டதாக காலை 11.16 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம்.
தீயணைப்பு வீரா்கள் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்த நேரத்தில், குடியிருப்பாளா்கள் ஏற்கெனவே வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். இதில் யாருக்கும் காயமோ, உயா்ச் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.