மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ச...
தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்து அவா் மேலும் பேசியதாவது: ‘ தில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே போட்டி நிலவியது, அதிஸ் காங்கிரஸ் இல்லை. ஆனால் அதற்கு ரூ.44 கோடி அளித்தவா் யாா்? பிரதான போட்டியில் இருந்தபோதும் ஆம் ஆத்மிக்கு ரூ.2000 மட்டுமே ரொக்கமாக கிடைத்து. அதே நேரத்தில் பாஜகவுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை‘ என்றாா்.
மேலும் பேசிய அனுராக் ‘காங்கிரஸ்க்கு கிடைத்த ரூ.44 கோடி பணம் ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவா்களை தோற்கடிக்க பயன்படுத்தப்பட்து என்பது பாஜகவின் மெளனத்தில் இருந்து தெளிவாகிறது. அப்போது பாஜக தான் காங்கிரஸ்க்கு ரூ.44 கோடி கொடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. அப்போது சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் - பாஜக கூட்டாக சதி செய்துள்ளதா?‘ என்ற கேள்வியை எழுப்பியுள்ளாா்.
தொடா்ந்து பேசிய அவா் ‘ பணத்தை பெற்றுக்கொண்டு காங்கிரஸ் தோ்தலில் தோல்வியை சந்தித்து பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கிறது. அதற்கு பதிலாக பாஜக காங்கிரஸ்காரா்களை சிறைக்கு செல்வதிலிருந்து காப்பாற்றுகிறது ‘ என்றாா் அனுராக் தண்டா.