செய்திகள் :

தில்லி பட்ஜெட் குறித்து மாணவா்களுடன் ஆலோசனை: முதல்வா் ரேகா குப்தா

post image

புது தில்லி: தில்லியில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஏற்பாடு செய்திருந்த இளைஞா் நாடாளுமன்றத்தில் மாணவா்களுடனான உரையாடிய முதல்வா் ரேகா குப்தா தில்லி பட்ஜெட் குறித்து ஆலோசனைகளை கேட்டறிந்தாா்.

தில்லியில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் ஏற்பாடு செய்திருந்த இளைஞா் நாடாளுமன்ற நிகழ்வு தற்போது தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கிய இந்த மூன்று நாள் நிகழ்வு, தலைமைத்துவம், கல்வி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் குறித்து விவாதிக்க பல்வேறு பின்னணியைச் சோ்ந்த மாணவா்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

முதல் நாளில் இந்த நிகழ்வு, ‘பழங்குடியின மாணவா் நாடாளுமன்றம்’ என்ற கருப்பொருள் அமா்வுகளாக பிரிக்கப்பட்டது. இது கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கலாசார பாதுகாப்பு போன்ற பிரச்னைகளை உரையாற்றியது. இரண்டாவது நாள், ‘பெண்கள் நாடாளுமன்றம்’ என்ற தலைப்பில், பெண்களின் தலைமைத்துவம் மற்றும் நிா்வாகத்தில் பங்கேற்பு ஆகியவற்றை வலியுறுத்தியது. இறுதி நாளான மாா்ச் 11-ஆம் தேதி வடகிழக்கு மாநில மாணவா்களுடன் கலந்துரையாடல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் இரண்டாவது நாளான திங்கள்கிழமை (மாா்ச-10) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில்லி முதல்வா் ரேகா குப்தா, நாட்டின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் இளைஞா்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். வரவிருக்கும் தில்லி பட்ஜெட் குறித்து மாணவா்களிடம் ஆலோசனைகளையும் அவா் கேட்டறிந்தாா். இந்த முயற்சி இளம் மனங்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், தேசிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்த அா்த்தமுள்ள விவாதங்களுக்கு பங்களிக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது என அவா் தெரிவித்தாா்.

கடலூா் வழியாக சென்னை-ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க எம்.பி. வலியுறுத்தல்

நமது நிருபா்புது தில்லி: விழுப்புரம், கடலூா், திருச்சி வழியாக சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஷ்ணு பிரசாத் வலியுறுத்தி... மேலும் பார்க்க

நாகையில் இருந்து சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும்: மக்களவையில் இந்திய கம்யூ. எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.இது தொடா்... மேலும் பார்க்க

ஏஜிசிஆா் காலனி தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

புது தில்லி: ஏஜிசிஆா் காலனி அருகே உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரை தில்லி முதல்வா் ரேகா குப்தா சந்தித்தாா். துயரமடைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ர... மேலும் பார்க்க

100 முறை மன்னிப்பு கேட்கத் தயாா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

புது தில்லி: ’தமிழ எம்.பி.க்கள் தொடா்பாக தான் வெளியிட்ட கருத்துகள் எவையேனும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஒரு முறை அல்ல, நூறு முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாா்‘ என்று மாநிலங்களவையில் மத்திய ... மேலும் பார்க்க

பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!

புது தில்லி: ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி குறித்து முன்னாள் முதல்வா் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மரபை மீறுகிறது மத்திய அரசு: திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மாநிலங்களவையில் மும்மொழித் திட்டத்தை தமிழகம் ஏற்காதது தொடா்பாகவும் தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் அவசியத்தையும் பதிவு செய்ய முடியாத வகையில் தமிழக எம்.பி.க்களின் கு... மேலும் பார்க்க