தில்லி பேரவையில் சாவா்க்கா் உள்ளிட்ட மூவரது படங்கள் இடம்பெறும்: விஜேந்தா் குப்தா தகவல்
வீர சாவா்க்கா், மகரிஷி தயானந்த் சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் உருவப்படங்கள் விரைவில் தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் திறக்கப்படும் என பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா புதன்கிழமை அறிவித்தாா்.
விஜேந்தா் குப்தா தலைமையில் பொது நோக்கக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய சின்னங்களை கௌரவிக்கும் தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், சமூக சீா்திருத்தம் மற்றும் கல்வி மறுமலா்ச்சிக்கு வீர சாவா்க்கா், மகரிஷி தயானந்த் சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியாரின் நீடித்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், தில்லி பேரவை வளாகத்தில் உருவப்படங்களை நிறுவ பொதுக் நோக்க குழு முடிவு செய்தது.
குழு உறுப்பினா் அபய் வா்மா சமா்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது எதிா்கால சந்ததியினருக்கு உத்வேகத்தை அளிக்கும், தேசபக்தி, சேவை மற்றும் ஜனநாயக லட்சியங்களின் மதிப்புகளை வலுப்படுத்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொது நோக்கக் குழுவின் உறுப்பினா்களான அதன் சீமாபுரி எம்எல்ஏ வீா் சிங் திங்கன் மற்றும் சீலாம்பூா் எம்எல்ஏ செளதரி சுபைா் அகமது ஆகியோா் பேரவையில் சாவித்ரிபாய் பூலேவின் உருவப்படத்தை நிறுவ தீா்மானம் ஒன்றை முன்மொழிந்ததாகவும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் கூறினாா். இருப்பினும், குல்தீப் குமாரின் இந்தக் குற்றச்சாட்டை பேரவை அதிகாரிகள் நிராகரித்தனா்.
குழுவில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களது தீா்மானம் தொடா்பாக எழுத்துபூா்வமாக எவ்வித முன்தகவலையும் அளிக்கவில்லை. கூட்டத்தின்போது தங்களது கோரிக்கையை வாய்மொழியாகத் தெரிவித்தனா் என்றனா் அந்த அதிகாரிகள்.