செய்திகள் :

தில்லி மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறையில் தீ விபத்து

post image

கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ‘வி35’ மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறைக்குள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாலின் மூன்றாவது மாடியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, காலை 11.35 மணியளவில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. டோனிக் பீட்சாவின் சமையலறைப் பகுதியிலிருந்து தீ விபத்து ஏற்பட்டது. மாலின் மேல் தளங்களை அடா்த்தியான புகை சூழ்ந்ததால், மக்களிடையே பீதி ஏற்பட்டது.

தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு சிறிது நேரத்திலேயே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும் காலை 11.40 மணிக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதையடுத்து, குளிரூட்டும்

பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

டெலிவரி நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: தில்லியின் ரஜோரி காா்டனில் டெலிவரி நிறுவனத்தின் சேமிப்பு இடமாகப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டடத்தின் முதல் தளத்தில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: தீ விபத்து குறித்து புதன்கிழமை காலை 8.05 மணிக்கு அழைப்பு வந்தது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. காலை 10.15 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடா்ந்து, குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தக் கட்டடம் புதுப்பிக்கும் பணியில் இருந்தது என்று அந்த அதிாகரி கூறினாா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க