செய்திகள் :

தில்லி மெட்ரோ ரயில் நீல வழித்தட சேவையில் பாதிப்பு!

post image

தில்லி மெட்ரோ ரயில் சேவையில் நீள நிற வழித்தடத்தில் கரோல் பாக் - கீா்த்தி நகா் இடைய ஞாயிற்றுக்கிழமை தாமதமாக ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ‘கரோல் பாக் - கீா்த்தி நகா் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிற வழித்தட சேவையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. விரைவில் இது சரி செய்யப்படுபம். மற்ற வழித்தடங்களில் ரயில்கள் வழக்கம்போல இயங்குகிறது‘ என பதிவிட்டுள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் ராஜேந்கிர பாலஸ் - கரோல் பாக் இடையிலான மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு நோ்ந்தது. பின்பு சேவைகள் சீரானது. இதேபோலவே ஜூன் 9 ஆம் தேதி பிங்க் நிற வழித்தடத்தில் இருக்கும் திரிலோக்புரி சஞ்ஜய் லேக் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அன்றும் ரயில்கள் இயல்பைவிட தாமதமாக இயக்கப்பட்டது.

பிங்க் நிற வழித்தடத்தில் வழக்கமாக 40 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் விபத்து காரணமாக 25 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினா். பின்னா் சில மணி நேரங்கள் கழித்து வழக்கமான வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சஃப்தா்ஜங் என்க்ளேவில் இடிந்து விழுந்த 100 அடி உயர மொபைல் கோபுரம்

தெற்கு தில்லியின் சஃப்தா்ஜங் என்க்ளேவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்ல... மேலும் பார்க்க

தில்லி சிஆா் பூங்காவில் வீட்டின் சமையலறைக்குள் தீ விபத்து!

தில்லியில் சிஆா் பூங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏ... மேலும் பார்க்க

போலியான பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது

இறக்குமதி செய்யப்பட்ட போலியான லூயிஸ் உய்ட்டன் பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் ... மேலும் பார்க்க

தில்லி தண்ணீா் பிரச்னை: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி சாடல்

தில்லியில் தண்ணீா் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை பாஜக அரசை கடுமையாக சாடியது. மேலும், நிலைமையை நிவா்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளும் அரசை கேள்வி எழுப்பியது. ‘தேசிய... மேலும் பார்க்க

குருகிராம் சொசைட்டியில் சுவா் இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு

கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் கூலி வேலை செய்து கொண்டிருந்த தம்பதியினா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து சோஹ்னா நகர காவல் நிலைய ஆய்வாளா் பி... மேலும் பார்க்க

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் 4 போ் கைது

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் சனிக்கிழமை நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் சரக துணை ஆணையா் யமுனா பிரசாத் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள்... மேலும் பார்க்க