செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
"தீண்டாமை குறியீடு... இனி `காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும்" - ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்றளவும் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியை மட்டும் சாதிய அடையாளத்தின் அடிப்படையில் `காலனி' என்று அழைக்கப்படுகிறது.

அரசு ஆவணங்களிலுமே அவர்கள் வாழும் பகுதியின் முகவரி ஊர் பெயரோடு சேர்த்து காலனி என்றே பதிவாகியிருக்கிறது.
இந்த நிலையில், இத்தகைய வழக்கைத்தை மாற்றும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பைச் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஸ்டாலின், "இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால், இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும் பொதுப்புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறினார்.