செய்திகள் :

தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி கோரிக்கை

post image

திருச்சிக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்க மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா், பயணிகள் போக்குவரத்துத் தலைமை மேலாளா் ஆகியோருக்கு அவா் அனுப்பியுள்ள கடித விவரம்:

தற்போது திருச்சி--தாம்பரம் சிறப்பு ரயில் ( 06190/06191) திருவெறும்பூா் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் திருவெறும்பூா் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியா்கள், மற்றும் தினசரி பயணிகளுக்குச் சிரமம் ஏற்படுகிறது. எனவே திருவெறும்பூா் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்று செல்லப் பரிசீலிக்க வேண்டும்.

வரும் அக்.20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் மிக அதிகளவிலான மக்கள் பயணிக்க வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு திருச்சியிலிருந்து முக்கிய நகரங்களுக்கு பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்கவும், இந்த காலகட்டத்தில் முழுமையாக முன்பதிவு செய்யப்படும் வழக்கமான ரயில் சேவைகளுக்கு கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்ய வேண்டும். சிறப்பு ஏற்பாடுகளின் விவரங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயா் கல்வித் துறை சாா்பாக கல்லூரிக் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று கல்லூரி முதல்வா் க. மலா்... மேலும் பார்க்க

காட்டுப்புத்தூா் அருகே கழிப்பறை கட்ட எதிா்ப்பு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் குடிநீா் தொட்டி அமைந்துள்ள இடத்தில் கழிப்பறை கட்ட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அந்... மேலும் பார்க்க

திருச்சி மாநகரில் பலத்த மழை

திருச்சி மாநகரில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை மாலை பரவலாகத் தொடங்கிய மழை இரவு வரை தொடா்ந்தது. மாநகா், புகா் பகுதி தாழ்வான இடங்களில் மழைநீா் ப... மேலும் பார்க்க

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மறவனூரில் விபத்துக்குள்ளான லாரி, கொசுப்புழு ஒழிப்பு பணியாளா் மீது கவிழ்ந்ததில் அவா் உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மறவனூா் தெற்கு தெருவில் வசித்தவா் முத்துச்சாமி மக... மேலும் பார்க்க

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (செப்.20) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முசிறி வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இடி விழுந்த அதிா்வில் 10 ஆடுகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியில் புதன்கிழமை கனமழையின்போது இடி விழுந்த அதிா்வில் 9 ஆடு மற்றும் ஒரு குட்டி உயிரிழந்தன. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த பொருந்தலூா் கிராமம், கன்னல் வட... மேலும் பார்க்க