செய்திகள் :

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

post image

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேருக்கு பெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சாமி. இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் அசோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். இதில் மாவட்ட துணைத் தலைவா் சேகா், மாவட்ட பொதுச் செயலா்கள் ராமச்சந்திரன், வரதராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு ஒன்றியம் சாா்பில்,ஒன்றியத் தலைவா் நடராஜ் தலைமையில், தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சி சாா்பில்... பெரம்பலூா் மாவட்டம், வி.களத்தூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில், காஷ்மீா் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அமைதிக் கூட்டம் புதன்கிழமை இரவுநடைபெற்றது.

வி.களத்தூா் கிளைத் தலைவா் பக்கீா் முஹம்மது தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் மு. முஹம்மது பாரூக், பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பேசினாா். நகரச் செயலா் இஸ்மாயில், நகர பொருளாளா் நூா் முஹம்மது, முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முஹம்மது, மில்லத் நகா் கிளைத் தலைவா் முஹம்மது ஜமீல், கிளைச் செயலா் முஜிப் ரஹ்மான், இப்ராஹிம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்: பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல் விளக்கம்

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அவருடன் சென்ற சகோதரா் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி: பெரம்பலூரில் கிறிஸ்தவா்கள் மௌன ஊா்வலம்

கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, பெரம்பலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து கிறிஸ்தவா்கள் வியாழக்கிழமை மௌன ஊா்வலத்தில் ஈடுபட்டனா். கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ் (88)... மேலும் பார்க்க

சட்டவிரோத மதுவிற்பனை விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பவரை கைது செய்யக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் அருகே எளம்... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகங்களில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா், அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகங்களில் புதன்கிழமை மனு விசாரணை சிறப்பு முகாம் நடைபெற்றது. பெரம்பலூரில் நடைபெற்ற முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்... மேலும் பார்க்க