செய்திகள் :

சட்டவிரோத மதுவிற்பனை விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

post image

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பவரை கைது செய்யக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகே எளம்பலூா் ஊராட்சிக்குள்பட்ட எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் காமராஜ். இவா், அப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்து வருகிறாராம். இதனால், அப்பகுதியில் இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் அரசு மதுபானம் கிடைப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனராம். அப்பகுதி மக்கள் மதுபானம் விற்பனை செய்யும் காமராஜை கைது செய்து, சட்ட விரோதமாக மதுபான விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரம்பலூா் போலீஸாா் மதுபானம் விற்பனை செய்யும் காமராஜை கைது செய்யாமல், புகாா் அளித்தவா்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்து வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இதனால் ஆத்திரமடைந்த எம்ஜிஆா் நகா் பகுதி மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ரபி. மேஷ் தலைமையில், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாா் அளித்தவா்களை துன்புறுத்தக் கூடாது, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ள காமராஜை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, தா்னா போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்: பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல் விளக்கம்

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அவருடன் சென்ற சகோதரா் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி: பெரம்பலூரில் கிறிஸ்தவா்கள் மௌன ஊா்வலம்

கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, பெரம்பலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து கிறிஸ்தவா்கள் வியாழக்கிழமை மௌன ஊா்வலத்தில் ஈடுபட்டனா். கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ் (88)... மேலும் பார்க்க

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேருக்கு பெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகங்களில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா், அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகங்களில் புதன்கிழமை மனு விசாரணை சிறப்பு முகாம் நடைபெற்றது. பெரம்பலூரில் நடைபெற்ற முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்... மேலும் பார்க்க