செய்திகள் :

போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி: பெரம்பலூரில் கிறிஸ்தவா்கள் மௌன ஊா்வலம்

post image

கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, பெரம்பலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து கிறிஸ்தவா்கள் வியாழக்கிழமை மௌன ஊா்வலத்தில் ஈடுபட்டனா்.

கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ் (88), கடந்த 21 ஆம் தேதி காலமானாா். அவரது மறைவையொட்டி,பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்திலிருந்து மறைவட்ட முதன்மை குரு சுவைக்கின் தலைமையில், கிறிஸ்தவா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மௌன ஊா்வலத்தில் ஈடுபட்டனா். தேரடி, கடைவீதி, கனரா வங்கி, பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை வழியாகச் சென்ற ஊா்வலம் மீடும் புனித பனிமய மாதா திருத்தல வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் போப் பிரான்சிஸ் உருவப் படத்தை கைகளில் ஏந்தி, அவரது நித்திய ஆன்மா இளைப்பாறுதலுக்காக ஜெபித்தனா். ஊா்வலத்தின் முடிவில், முதன்மை குரு சுவைக்கின் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டது. தொடா்ந்து, பீடத்தின் முன் வைக்கப் பட்டிருந்த போப் பிரான்ஸ்சிஸ் உருவப்படத்துக்கு ஜெபம்செய்து மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதில், புனித பிரான்சிஸ் கன்னியா் இல்ல தலைவி அருட்சகோதரி ஜோசப் கபிரியேல் ரெஜினா, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி பாஸ்கா, கன்னியா் இல்ல கன்னியா்கள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்டச்செயலாளா் ரினோ பாஸ்டின் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்: பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல் விளக்கம்

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அவருடன் சென்ற சகோதரா் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேருக்கு பெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

சட்டவிரோத மதுவிற்பனை விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பவரை கைது செய்யக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் அருகே எளம்... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகங்களில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா், அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகங்களில் புதன்கிழமை மனு விசாரணை சிறப்பு முகாம் நடைபெற்றது. பெரம்பலூரில் நடைபெற்ற முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்... மேலும் பார்க்க