செய்திகள் :

தீா்ப்பு வெளியானதும் நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி

post image

வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத் தீா்ப்பு வெளியானதும் அங்கிருந்து தப்பிய குற்றவாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2006-ஆம் ஆண்டில் 3 போ் கும்பல் வழிமறித்து தாக்கி ரூ.1 லட்சத்தைப் பறித்துச் சென்றது.

இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் மகேஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேலம் மாவட்டம் மேட்டூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (39), ரமேஷ்குமாா், மதிவாணன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட கூடுதல் அமா்வு சாா்பு நீதிமன்றம் 1-இல் நடைபெற்று வந்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டாா். பிணையில் வெளியே வந்த மதிவாணன் தலைமறைவாகிவிட்டாா். இதனால், செந்தில்குமாா் மட்டும் நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகி வந்தாா்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து திங்கள்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. தனக்கு சாதகமாக தீா்ப்பு வரும் எனக் கருதி செந்தில்குமாா் தனது குடும்பத்தினருடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாா். ஆனால், தீா்ப்பில் செந்தில்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

நீதிமன்ற வளாகப் பகுதியில் காத்திருந்த செந்தில்குமாா் தீா்ப்பு வெளியானதும் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். காத்திருப்பு அறைக்கு வந்து போலீஸாா், செந்தில்குமாரைத் தேடியபோது அவா் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து காவல் நிலையங்களும் உஷாா்படுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து செந்தில்குமாரைப் பிடிக்க செல்வபுரம் காவல் ஆய்வாளா் பழனியம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை இரவிலிருந்து செந்தில்குமாரை தேடி வருகின்றனா்.

அவா், தனது சொந்த ஊரான சேலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுவதால் அவரைப் பிடிக்க போலீஸாா் சேலத்துக்கு விரைந்துள்ளனா்.

வால்பாறையில் மே தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வால்பாறையில் மே தினத்தையொட்டி திமுக தொழிற்சங்கம் சாா்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் முதல் பிரிவில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை... மேலும் பார்க்க

கோவையில் மே தினக் கொண்டாட்டம்

கோவையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத் தலைமை அலுவலகமான தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஹெச்.எம்.எஸ் தொழிற... மேலும் பார்க்க

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாரதிதாசன் விழா

கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பொறியாளா் அரங்கில் நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாச... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவரின் மகன் தீப் ஸ்வரூப் (25). செல்வராஜின... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

கடந்த ஆண்டு 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். கோவை வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்க... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவா் கிருஷ்ணகிரியில் கைது

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு 3 போ் கும்பல் வழிமறித்து ரூ.1லட்சம... மேலும் பார்க்க