செய்திகள் :

துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவின் ஆதாயம் தெரிய ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை!

post image

துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவுக்கு எவ்வளவு சாம்பியன்ஸ் டிராபியில் எவ்வளவு சாதகம் எனத் தெரிய ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை என தென்னாப்பிரிக்க வீரர் வான் டர் டுசென் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆனால், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.

மற்ற அணிகள் இந்தியாவுடன் விளையாட வேண்டுமெனில் 2 இடங்களில் விளையாட வேண்டும். அதற்கேற்ப அணிகளை தயார் செய்ய வேண்டும். ஆனால், இந்தியாவுக்கு அந்தப் பிரச்னை இல்லை. இது முற்றிலும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானதென பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தென்னாப்பிரிக்க வீரர் வான் டர் டுசென் கூறியதாவது:

இந்தியாவுக்கு மிகவும் ஆதாயனது. இது குறித்து பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்ததைப் பார்த்தேன். ஆனால், இது நிச்சயமாக இந்தியாவுக்கு ஆதாயாம்தான்.

ஒரே இடத்தில் தங்கி, ஒரே விடுதியில் இருந்து ஒரேமாதிரி வசதிகள் உடன் பயிற்சி செய்தல், ஒரே திடல், ஒரே பிட்சில் விளையாடுவது நிச்சயமாக இந்தியாவுக்கு ஆதாயம்தான்.

இதைத் தெரிந்துகொள்ள ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. அந்த ஆதாயத்தைப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்கள் மீது இருக்கும். இதற்கு அர்த்தம் அவர்களுக்கு அது கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். ஏனெனில் இது இந்திய வீரர்களுக்கும் தெரியும் என்றார்.

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்... மேலும் பார்க்க

துபையில் மட்டுமே விளையாடும் இந்திய அணி; நியூசிலாந்து வீரர் கூறுவதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடவுள்ள போட்டி குறித்து நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற... மேலும் பார்க்க

இருவர் அசத்தல் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டி... மேலும் பார்க்க

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷஷாங் சிங் மிகவும் சிறப்பாக விள... மேலும் பார்க்க

இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!

ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபியின் 10ஆவது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கன்... மேலும் பார்க்க

இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது: ஷிகர் தவான்

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஷுப்மன் கில் மிகவ... மேலும் பார்க்க