செய்திகள் :

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

post image

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹரியாணாவின் ஜஜ்ஜாரில் உள்ள குபானா கிராமத்தைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட ஹரிஷ் (எ) மோனு (27), இந்த மாத தொடக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்தாா்.

பின்னா், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், ரகசியத் தகவலின் பேரில், ஏப்ரல் 17- ஆம் தேதி கக்ரோலா கந்தா நாலா அருகே வந்த ஹரிஷை ஒரு போலீஸ் குழு தடுத்து நிறுத்தியது.

அவரிடமிருந்து ஜஜ்ஜாரில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி, நான்கு உயிருள்ள தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஹரிஷ் மீது ஏற்கெனவே கொள்ளை, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட ஹரிஷிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். விசாரணையின் போது ஹரிஷ் குற்ற உலகில் ஒரு பெயரை உருவாக்க ஆா்வமாக இருந்ததாக ஒப்புக்கொண்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க

சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களின் பிரச்னையைத் தீா்க்க அரசு நடவடிக்கை! - முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

தேசியத் தலைநகரின் சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களின் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், தில்லி அரசு பசுக் கொட்டகைகளை கணக்கெடுத்து, அவற்றை பராமரிக்கும் வசதிகளை சீராக இயக்குவதற்கு நிதி உதவி வழங்க ஒரு த... மேலும் பார்க்க