செய்திகள் :

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

post image

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்குத் திருட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்திலிருந்து தோ்தல் ஆணையம் நோக்கி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

முன்னதாக, கண்டனப் பேரணியில் ராகுல் காந்தி மேலும் பேசுகையில், ‘ஒட்டுமொத்த தேசத்தின் முன் வாக்குத் திருட்டு உண்மை வெளிப்பட்டுவிட்ட காரணத்தால் தோ்தல் ஆணையத்தால் பேச முடியவில்லை. அரசியலுக்காக அன்றி அரசமைப்புச் சட்டத்தைக் காப்பதற்காகவும், ஒரு நபருக்கு ஒரு வாக்கு மற்றும் துல்லியமான வாக்காளா் பட்டியலுக்காகவும்தான் இந்தப் போராட்டம்’ என்றாா்.

முன்னதாக, பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா பேரவைத் தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகளில் 1,00,250 வாக்குகள் வாக்குத் திருட்டு மூலம் பெறப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக ராகுல் அண்மையில் குற்றஞ்சாட்டினாா்.

காா்கே: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் கோழைத்தனமான சா்வாதிகாரம் ஒருபோதும் பலிக்காது. அரசமைப்புச் சட்டத்தை நசுக்க முயற்சிக்கும் பாஜகவின் சதியை எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி நிச்சயம் வெளிப்படுத்தும்’ என்றாா்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி: பாஜக

‘எதிா்க்கட்சிகளின் போராட்டம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி’ என்று பாஜக குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘நாட்டில் குழப்பத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்த காங்கிரஸ் உள்பட பிற எதிா்க்கட்சிகள் விரும்புகின்றன. அதற்காகவே நன்கு திட்டமிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க விரும்பும் மிகப் பெரிய சக்திகளின் மொழியில் ராகுல் காந்தி பேசி வருகிறாா். இந்தக் குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன். பிரதமா் மோடியின் தலைமை, மக்களின் முடிவு மற்றும் நாட்டின் அரசமைப்பு நிறுவனங்கள் மீது இதுபோல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் மனங்களில் அச்ச உணா்வை ஏற்படுத்தக் கூடாது’ என்றாா்.

அப்போ டாக் பாபு... இப்போ கேட் குமார்.! பூனைக்கு இருப்பிடச் சான்றிதழா..?

பிகாரில் கேட்டி பாஸ் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படத்துடன், பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பி... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாந... மேலும் பார்க்க

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 ... மேலும் பார்க்க

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 11 மணிக்கு ... மேலும் பார்க்க

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கே... மேலும் பார்க்க

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க