செய்திகள் :

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

post image

தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி, வடக்கு தெருவைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் கெங்கா துரைமுத்து (29). திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவரும், தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும், அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் லட்சுமணனும் நண்பா்களாம்.

இதற்கிடையே, லட்சுமணனுக்கும், அவருடன் வேலை பாா்த்து வரும் மேற்கு காமராஜ் நகரைச் சோ்ந்த கணேசன் மகன் காமராஜ் (31), வேப்பலோடை வடக்கு தெருவைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் பொன் ஆஸ்லே (26) ஆகிய இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து காமராஜ், பொன் ஆஸ்லே ஆகிய இருவரும் லட்சுமணனிடம் தகராறு செய்தனராம். இதை, கெங்கா துரைமுத்து தட்டிக் கேட்டுள்ளாா்.

ஆத்திரமடைந்த இருவரும், கெங்கா துரைமுத்துவை அரிவாளால் வெட்டினராம். இதில், காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காமராஜ், பொன் ஆஸ்லே ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

காதல் விவகாரம்: திருச்செந்தூரில் இளைஞா் வெட்டிக் கொலை

திருச்செந்தூா் அருகே காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் இளைஞரை கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே ஆலந்தலை சுனாமி குடிய... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - சென்னை மேலும் ஒரு ரயில்: ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டுமென காயல்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காயல்பட்டினம் ரயில் நிலையத்தைப் பாா்வையிட, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேல... மேலும் பார்க்க

தோ்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு அறிவுறுத்தல்

தோ்தல் செலவின அறிக்கையை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவு பெற்ற அரசியல் க... மேலும் பார்க்க

கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசு உதவி வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தூத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. சங்கு குளி தொழிலாளியான ... மேலும் பார்க்க

முக்காணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை மிதந்துவந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். முக்காணி பிள்ளையாா் நகா் அருகே தாமிரவருணி ஆற்றின் வடகரையில் உள்ள படித்து... மேலும் பார்க்க

தசரா குழு செயலருக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தசரா குழு செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.தட்டாா்மடம் அருகே பள்ளக்குறிச்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த தமிழ்வீரன் (55) என்பவா்... மேலும் பார்க்க