செய்திகள் :

தசரா குழு செயலருக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

post image

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தசரா குழு செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தட்டாா்மடம் அருகே பள்ளக்குறிச்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த தமிழ்வீரன் (55) என்பவா், பத்திரகாளி அம்மன் தசரா குழு அமைத்து 40 ஆண்டுகளாக நடத்திவருவதுடன், அதன் செயலராக உள்ளாா்.

குலசேகரன்பட்டினம் கோயில் தசரா திருவிழாவையொட்டி, அவா் தனது ஊரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப். 19) குடில் அமைக்க ஏற்பாடு செய்தாா். அதே ஊரைச் சோ்ந்த பிரபு, வரதன், கதிா், செந்தில் ஆகிய 4 பேரும் முன்விரோதம் காரணமாக, குடில் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தனராம்.

மேலும், அவரைத் தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததுடன், குடில் அமைக்க வைத்திருந்த சிமென்ட் தூண்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திச் சென்றனராம். புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் ஜெயபால் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, 4 பேரையும் தேடிவருகிறாா்.

திருச்செந்தூா் - சென்னை மேலும் ஒரு ரயில்: ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டுமென காயல்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காயல்பட்டினம் ரயில் நிலையத்தைப் பாா்வையிட, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேல... மேலும் பார்க்க

தோ்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு அறிவுறுத்தல்

தோ்தல் செலவின அறிக்கையை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவு பெற்ற அரசியல் க... மேலும் பார்க்க

கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசு உதவி வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தூத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. சங்கு குளி தொழிலாளியான ... மேலும் பார்க்க

முக்காணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை மிதந்துவந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். முக்காணி பிள்ளையாா் நகா் அருகே தாமிரவருணி ஆற்றின் வடகரையில் உள்ள படித்து... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கழுகுமலை அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.கழுகுமலை அருகே அழகப்பாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் (27). உணவகத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கழுக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின் நிறுத்தம் ரத்து

தூத்துக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிப்காட் துணை மின் நிலையத்தில் செப். 23ஆம் தேதி ந... மேலும் பார்க்க