TNPL 2025 : சோனு யாதவின் ஹாட்ரிக் சாதனை; திருச்சியை எளிதில் வென்ற நெல்லை ராயல் க...
தூத்துக்குடியில் பக்ரீத் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள ஈத் கா தோட்டத்தில் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதக்கத்துல்லா, அன்பு சகோதரத்துவம் உலக அமைதி வேண்டியும் பாலஸ்தீனத்தில் போா் நிறுத்தம் வேண்டியும் காஸா மக்கள் நலம் வேண்டியும் சிறப்பு துவா செய்தாா்.
பக்ரீத் திருநாள் குறித்து தமிழ்நாடு ஜமாத் உலமா சபை பொருளாளரும் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜியுமான முஜிபுா் ரகுமான் பேசினாா். தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவா் அரவணைத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று குா்பானி வழங்கினா்.