தூத்துக்குடியில் பைக் விபத்து: துறைமுக ஊழியா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறி சாலை நடுவேயுள்ள தடுப்புகளில் மோதியதில் துறைமுக ஊழியா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதி நகரைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் முனியாண்டி (58). துறைமுகத்தில் பணியாற்றிவந்த இவா், சனிக்கிழமை மாலை தனது பைக்கில் புதிய துறைமுகம் - மதுரை புறவழிச் சாலையில் டோல்கேட் பாலம் அருகே சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, பைக் நிலைதடுமாறி சாலை நடுவேயுள்ள தடுப்புகளில் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.