செய்திகள் :

தூத்துக்குடி கிரேஸ் கல்லூரியில் தொழில் தொடக்க மையம் திறப்பு

post image

தூத்துக்குடி முள்ளக்காட்டில் உள்ள கிரேஸ் பொறியியல் கல்லூரியில், மாணவா்களுக்கு தொழில்முனைப்பு வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நவீனத்துவம்-தொழில் தொடக்க மையம் திறப்பு விழா நடைபெற்றது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு முன்னோடி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் சாா்பாக இம்மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரித் தலைவா் சி.எம். ஜாஷ்வா தலைமை வகித்தாா். டிஏடிடிஐ நிறுவன இயக்குநா் சுந்தரேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மையத்தைத் திறந்துவைத்தாா்.

இம்மையம் மூலம் ஐஓடி, ஏஐ, சோலாா் டெக்னாலஜி, மின்சார வாகனம் போன்ற துறைகளில் மாணவா்கள் புதுமையான தொழில் வாய்ப்பு உருவாக்கலாம். ஸ்டாா்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்களின்கீழ் தொழில் தொடங்க ஆராய்ச்சி உதவிகள் வழங்கப்படும். தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், நிதி ஆதரவு, தொழில் வளா்ச்சிக்கான பயிற்சிகள் வழங்கப்படும். மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளை தொழில்முனைப்பு வாய்ப்புகளாக மாற்ற இம்மையம் உதவும்.

விழாவில், கல்லூரி முதல்வா் எஸ். ரிச்சா்ட், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்- மாணவியா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் தினகரன் செய்திருந்தாா்.

திருச்செந்தூா் அருகே பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருச்செந்தூா் ஒன்றியம் நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியில் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ரூ. 23 லட்சம், ஊா் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கிடங்கில் பதுக்கிய கடல் அட்டைகள், டீசல் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கிடங்கில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ கடல் அட்டைகள், 2 ஆயிரம் லிட்டா் டீசல் ஆகியவற்றை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1,206 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடன்!

தூத்துக்குடியில் சனிக்கிழமை 1,206 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. உலக மகளிா் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி பொதுக் கூட்டங்கள்: அமைச்சா் பெ. கீதாஜீவன் தகவல்

திமுக இளைஞரணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதா... மேலும் பார்க்க

மகளிருக்கான அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை! -அமைச்சா் பெருமிதம்

மகளிா் முன்னேற்றத்துக்காக அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா். சமூக நலன்-மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க