தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2 புதிய சந்தைகள் அமைக்கப்படும்: மேயா்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேலும் இரண்டு புதிய சந்தைகள் அமைக்கப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமைத் தொடங்கி வைத்து மேயா் பேசியதாவது:
சொத்துவரி பெயா் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவற்றிற்கு பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்படுகிறது.
ஆஷ்துரை நினைவிடத்தில் முதியோா் கூடும் வகையில் பூங்கா அமைக்கப்படும், தெப்பக்குளம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
மாநகர வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, மேலும் 2 இடங்களில் சந்தைகள் அமைக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி ஆணையா் வெங்கட்ராமன், பொறியாளா் தமிழ்ச்செல்வன், நகர அமைப்பு திட்ட பொறியாளா் ரெங்கநாதன், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார குழுத் தலைவா் சுரேஷ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் தனலட்சுமி, ராமு அம்மாள், ஜான்சிராணி, பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, ரெக்ஸிலின், மரியகீதா, மும்தாஜ், எடின்டா, சரண்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.