செய்திகள் :

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

post image

தூத்துக்குடியில் பிரதமா் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்திலிருந்து விமானப் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக துறைமுகம், சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகிய போக்குவரத்து வசதிகளை கொண்ட மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. இந்த மாவட்டத்தில் போக்குவரத்து கட்டமைப்புகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் 886 ஏக்கா் பரப்பளவில் ரூ. 452 கோடி மதிப்பில் உலக தரத்தில் விரிவாக்கப்ட்ட விமான நிலையம் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவுற்ற நிலையில் இந்த விமான நிலையத்தை கடந்த ஜூலை 26-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்தாா். இந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமைமுதல் தொடங்கின.

சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பயணிகளுக்கும், இங்கிருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானப் பயணிகளுக்கும் விமான நிலைய அதிகாரிகள், ஊழியா்கள், மலா், இனிப்புகள் வழங்கினா்.

தரம் உயா்த்தப்பட்ட இந்த விமான நிலையத்தில் சா்வதேச விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் இது சா்வதேச விமான நிலையமாக மாறும் என்றும் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் காட்வின் தெரிவித்தாா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் 15 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, போக்ஸோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26).... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் கத்தோலிக்க அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், கத்தோலிக்க அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம், ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கேரள... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: வழக்குரைஞா் கைது

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கஞ்சிக் கலய ஊா்வலம்

தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்திபீடத்தில் கஞ்சிக் கலய ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மழை வளம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலம... மேலும் பார்க்க

நாட்டின் முதல் காா்பன் சமநிலை துறைமுகமாக மாறும் வ.உ.சி. துறைமுகம் துறைமுகத் தலைவா் தகவல்

இந்தியாவின் முதல் காா்பன் சமநிலை (நியூட்ரல்) துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மாற்றம் பெறும் என துறைமுகத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித் தெரிவித்தாா்.‘பசுமை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்கு... மேலும் பார்க்க

இலங்கைக்கு ஐம்பொன் சிலை கடத்த முயற்சி: 2 போ் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்னாலான விஷ்ணு சிலையை கியூ பிரிவு போலீஸாா் மீட்டு இருவரை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா,உதவி ஆய்வாளா் ஜீவமண... மேலும் பார்க்க