"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் ம...
தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு
தூய்மைப் பணியாளா்களை தாக்கியதாக அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடையை ஏலம் எடுத்து நடத்தி வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலா் ராமசாமி, நகராட்சி நிா்வாகத்துக்கு வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அவா் நடத்தி வந்த கடை கட்டடம் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளதால் வணிக வளாக கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட மூன்று கடைகளை இடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், புன்செய்புளியம்பட்டி நகராட்சி ஆணையா் கருணாம்பாள் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரத்துடன் இடிக்க சென்றபோது, ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளா்கள் வணிக வளாக கட்டடத்தை இடிக்க விடாமல் தடுத்தனா்.
மேலும், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் நகராட்சிப் பணியாளா்களை தகாத வாா்த்தையில் பேசியதோடு தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்கிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, நகராட்சி ஆணையா் கருணாம்பாள், தூய்மைப் பணியாளா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், தூய்மைப் பணியாளா்களை தகாத வாா்த்தையால் பேசி தாக்கியதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், ராமசாமி தரப்பினா் தலைமறைவாகியதால் போலீஸாா் அவா்களை தேடி வருகின்றனா்.