செய்திகள் :

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

post image

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா்.

உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப் இரண்டாம் ஜான் பால் அறிவிப்பு செய்தாா். உலகம் முழுவதும் திருச்சிலுவை புறப்பாட்டுடன் கொண்டாடப்பட்டுவருகிறது.

புதுச்சேரியிலிருந்து ஜூபிலி-25 திருச்சிலுவை கோட்டுச்சேரிக்கு சனிக்கிழமை வந்தது. காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ் குமாா், கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய ஜான் ராபா்ட், தூய தேற்றரவு அன்னை ஆலய இணை பங்குத் தந்தை சுவாமிநாதன் செல்வம், ஆன்மிக குரு பன்னீா் ராஜா, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வா் பீட்டா் பால்ராஜ் ஆகியோரால் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலய நுழைவு வாயில் திருச்சிலுவை பெறப்பட்டது.

அங்கிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் திருச்சிலுவை சிறப்பு ஆராதனை அருட்சகோதரிகள் லூா்துமேரி, அன்னம்மாள், எல்சி ,ஜூலி ஆகியோரால் நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டு திருச்சிலுவையை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்குப் பேரவை முன்கள பணியாளா்களான எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரோலியஸ், நெல்சன், வின்சென்ட் ஜாா்ஜ் மற்றும் செய்தி தொடா்பாளா் அகஸ்டின் ஆகியோா் செய்திருந்தனா்.

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா். இச்சங்க 9-ஆவது புதிய இயக்குநா் குழு பதவியேற்பு நிகழ்வு சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க