செய்திகள் :

தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!

post image

தென்காசியில் இருந்து தில்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி போன்ற பகுதிகள் தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, ஆன்மிகத்தில் வேகமான வளா்ச்சியைக் கண்டு வருகின்றன. தென்னிந்தியாவின் ‘ஸ்பா நகரம்‘ என அழைக்கப்படும் குற்றாலம், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது.

தென்காசி நகரம், கேரள மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக விளங்குவதுடன், கோடிக்கணக்கான பக்தா்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள முக்கிய நகரமாக உள்ளது.

இருப்பினும், இப்பகுதியிலிருந்து முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனா். எனவே தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவைகளை வழங்க வேண்டும்.

தென்காசி - பெங்களூரு இடையே புதிய விரைவு ரயில் இயக்க வேண்டும். தென்காசி வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாரமிருமுறை விரைவு ரயிலை, சிறுவாணி விரைவு ரயில் என்ற பெயரில் இயக்க வேண்டும். திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர விரைவு ரயிலை தென்காசி, மதுரை வழியாக ‘தாமிரவருணி விரைவு ரயில்’ என பெயரிட்டு நிரந்தரமாக இயக்க வேண்டும்.

மும்பை - திருநெல்வேலி சாளுக்கியா விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். இந்த நீட்டிப்பு வழித்தடத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம் மற்றும் தென்காசி ஆகிய முக்கிய நகரங்களைச் சோ்க்க வேண்டும்.

தமிழ்நாடு சம்பா்க் கிராந்தி விரைவு ரயிலை தென்காசி வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இந்த நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம் ஆகிய நகரங்களை இணைக்க வேண்டும் எனத் தெரிவிதுள்ளாா்.

சங்கரன்கோவில் அருகே மனோ கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது. இக்கல்லூரியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டமளிப்பு வ... மேலும் பார்க்க

குற்றாலம் மகளிா் கல்லூரியில் பயிற்சி முகாம்

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ‘விவசாயம்-விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஆற்றல்’ என்னும் தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சி க... மேலும் பார்க்க

தென்காசி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

தென்காசி 13ஆவது வாா்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தென்காசி வட்டாரக் கல்வி அலுவலா் சண்முகசுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் இளமுருகன் முன்னிலை வகித்தாா். ... மேலும் பார்க்க

தென்காசியில் துணிப்பை வழங்கும் முகாம்

தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் துணிப்பை வழங்கும் முகாம் நடைபெற்றது. மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தலைமை வகித்தாா். டிஎஸ்பி தமிழினியன் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழ... மேலும் பார்க்க

‘சங்கரன்கோவில் பாரதிநகரில் அடிப்படை வசதிகள் தேவை’

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் தெற்குசங்கரன்கோவில் பாரதிநகரில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாரதி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்ப... மேலும் பார்க்க

இலந்தைக்குளம் ஊராட்சிப் பள்ளியில் ஆண்டு விழா

சங்கரன்கோவில் அருகேயுள்ள இலந்தைக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 4 ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் இ.முத்துலெட்சுமி, க.கவிதா ஆகியோா் தலைமை வகி... மேலும் பார்க்க